Posts

Showing posts from April, 2023

குழந்தை இயேசு நவநாள்

Image
தொடக்கப் பாடல்: அற்புதக் குழந்தை இயேசுவே! அடியோர் மேல் இரக்கமாயிரும். (மும்முறை) தொடக்கச் செபம்: அற்புதக் குழந்தை இயேசுவே! எங்களை ஆசீர்வதித்து வரவேற்கக் கரம் விரித்துக் காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவி புரியும். நீரே எங்கள் ஆண்டவர். நீரே எங்கள் மீட்பர். எங்களைப் பற்றி உமக்கு அதிக அக்கறை உண்டு. எங்கள் மன்றாட்டுக்களைக் கேட்க நீர் எங்களோடு எப்போதும் இருக்கின்றீர். எனவே, எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து, எங்கள் மன்றாட்டுக்களைக் கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமை மிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு கெஞ்சிக் கேட்கிறோம். தந்தையோடும், தூய ஆவியாரோடும், இறைவனாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி புரியும் இயேசுவே. ஆமென். விண்ணப்ப ச்  செபம்: அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம், எங்கள் செபத்தைக் கனிவோடு ஏற்று, உருக்கமாக நாங்கள் மன்றாடிய இந்த வரங்களை அளித்தருளும்படி உம்மைப் பணிவோடு கெஞ்சி மன்றாடுகிறோம்....

தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கோடி| Deivam Unnai Thedi Nenjil Raagam Koodii

Image
தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கோடி நீயே என் வாழ்வின் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம் தங்கும் எந்தன் உள்ளம் பொங்கும் அன்பின் வெள்ளம் 1. வானில் உலவும் நிலவும் இங்கு தேய்ந்து போகலாம் தேனில் கலந்த மலரும் இங்கு காய்ந்து வீழலாம் உயிரில் கலந்த உணவும் இங்கு உடைந்து போகலாம் விழியில் விழுந்த நினைவும் இங்கு வழிகள் மாறலாம் காலம் தேயலாம் உன் கருணை மாறுமோ வாசம் போகலாம் உன் பாசம் தீருமோ இயேசுவே 2. சாய்ந்து கொள்ளத் தோள்கள் தினம் தந்த தெய்வமே சோர்ந்து போகும் கால்கள் பலம் தந்த செல்வமே முள்ளில் விழுந்து தொழுதேன் நீ உறவில் தேடினாய் அள்ளி அன்னையாய் எடுத்தாய் உன் சிறகில் மூடினாய் நதிகள் காயலாம் உன் நட்பு காயுமோ நண்பர் பிரியலாம் உன் அன்பு மாறுமோ இயேசுவே

குழந்தை இயேசுவுக்கு செபம்

Image
1. எங்கள் மீட்புக்காகப் பரம தந்தையிடமிருந்து இறங்கி தூய ஆவியினால் கருவாகி, கன்னியின் உதிரத்தை அருவருக்காமல் வாக்கே மனுவுருவாகிய மிகவும் இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்  பா லனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள் 2. உம் அன்னை வழியாக எலிசபெத்தம்மாளைச் சந்தித்து உம் முன்னோடியான அருளப்பரைத் தூய ஆவியினால் நிரப்பி அவருடைய தாயின் உதரத்திலே அவரை அர்ச்சித்தருளிய இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள். 3. ஒன்பது மாதம் கன்னித் தாயின் உதிரத்தில் அடைபட்டு புனித கன்னி மரியாவினாலும் புனித சூசையப்பராலும் மிகுந்த ஆர்வத்தோடு வளர்க்கப்பட்டு உலக மீட்புக்காக தந்தையாகிய இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள். 4. பெத்தலகேம் நகரில் கன்னிமரியாவிடமிருந்து பிறந்து துணிகளால் போர்த்தப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டு வானத் தூதர்களால் அறிவிக்கப்பட்டு, இடையர்களால் சந்திக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரி...

புனித தேவசகாயம் பிள்ளை வாழ்கை வரலாறு

Image
புனித தேவசகாயம் பிள்ளை வாழ்கை வரலாறு பிறப்பு மறை சாட்சி   தேவசகாயம் பிள்ளை   இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில்  1712 ஆம் ஆண்டு ,  ஏப்பிரல்  23 ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமசுகிருதம் ,  கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை ,  வர்ம கலைகள் ,  போரிற்கான ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார். அதன் பின்னர் இவர்   மார்த்தாண்ட வர்மாவின்   அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. மனமாற்றம் 1741 இல் குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்...

அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா அருளைப் பொழிவதும் நீதானம்மா |Amma Amma Anbin Vadivamey

Image
அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா அருளைப் பொழிவதும் நீதானம்மா ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா 1. மணிமுடி அணிந்த மாதவளே இந்த மாநிலம் காத்திடும் தூயவளே (2) உண்மையை ஊட்டிடும் பேரழகே எந்தன் உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே 2. துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா (2) அன்பினில் என்றுமே அரவணைத்தென்னை அருளினில் வளர்த்திட வேண்டுமம்மா

ஆண்டவர்க் குகந்த புனிதரிதோமாந்தர் அனைவரின் புகழ்பெற்றார் - Andavarikugantha Pudgarithomanthar Annaivarin puzgalpeeta

Image
ஆண்டவர்க் குகந்த புனிதரிதோ மாந்தர் அனைவரின் புகழ்பெற்றார் ஈடிணையில்லா வந்தனையும் இன்றே பெறவும் தகுதி பெற்றார் 1. புனிதம் தகைமை தாழ்ச்சியுடன் பொற்புரு கற்புக் கணிகலனாய் உடலில் உயிரும் உள்ளவரை உன்னத வாழ்வும் வாழ்ந்தாரே 2. அவரது புனித வாழ்க்கையினால் ஆயிரம் பேர்கள் ஆங்காங்கே அவல நோய்கள் கொண்டவர்கள் அற்புதமாகவே குணம் பெற்றார் 3. ஆகவே நாமும் சபையாக அவரது புகழ்தனைப் பாடுவதால் உற்ற அவரது வேண்டுதலால் உதவிகள் பெற்று மகிழ்வோமே 4. விண்ணக அரியணை மேலமர்ந்து மின்னிடும் ஒளியில் வீற்றிருந்து மூவுலகெல்லாம் ஆண்டு வரும் மூவொரு இறைவன் வாழியவே - ஆமென்

இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே- Yesuvey Un Pathathil Amarthidavey Aaasai Nan Vazlarthen

Image
இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே (2) -4 1. காலமும் உனையே காண்பதற்கே காரிருள் நீக்கி அருள்வாயே (2) -4 2. இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே இதயத்தில் அமைதி அருள்வாயே (2) -4

இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே - Yesuvin Irudhaiyamey Yenkum Yerinthidum Arulmayamey

Image
இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2 1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2 2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2 அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால் எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு 3. இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2 எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால் எந்த இரவிலும் காவலுண்டு - 2

ஒப்புரவு அருள் அடையாள செபம்:

Image
எல்லாம் வல்ல இறைவனிடமும், எப்பொழுதும் கன்னியான தூய மரியாவிடமும், அதிதூதரான தூய மைக்கேலிடமும், திருமுழுக்கு யோவானிடமும்,  திருத்தூதர்களான தூய பேதுரு, தூய பவுலிடமும், புனிதர் அனைவரிடமும், தந்தையே உங்களிடமும், நான் பாவி என்று ஏற்றுக் கொள்கிறேன். எனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்பொழுதும் கன்னியான தூய மரியாவையும், அதிதூதரான தூய மைக்கேலையும், திருமுழுக்கு யோவானையும், திருத்தூதர்களான தூய பேதுரு, தூய பவுலையும், புனிதர் அனைவரையும், தந்தையே உங்களையும், நம் தேவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன். ஆமென்.

சுருக்கமான மனத் துயர் செபம்:

Image
என் இறைவனாகியத் தந்தையே! நன்மைகள் நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் நான் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும், நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும், மனம் வருந்துகிறேன். உமது அருள் உதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆமென்.

மனத் துயர் செபம்

Image
எல்லாம் வல்ல இறைவா! நீர் அளவில்லாத அனைத்து நன்மைகளும் நிறைந்தவராக இருப்பதால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் உம்மை முழு மனதோடு அன்பு செய்கிறேன். இப்படிப்பட்ட உமக்கு எதிராகப் பாவங்களைச் செய்ததால் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். எனக்கு இந்த மனத்துயரின்றி வேறு மனத்துயரில்லை. எனக்கு இந்தத் துக்கமின்றி வேறு துக்கமில்லை. இனி ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லையென்று உறுதி செய்கிறேன். மேலும், எனக்கு வலுவில்லாததால் இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிந்தின திரு இரத்தத்தால் என் பாவங்களை எல்லாம் கழுவி, மன்னித்து, உமது இரக்கத்தையும், விண்ணக நிலைவாழ்வையும் தந்தருளுவீர் என்று முழுமனதோடு நம்புகிறேன். திரு அவை நம்பிக்கையோடு கற்றுத் தரும் உண்மைகளை எல்லாம் நீரே கற்றுத் தந்தது என நான் உறுதியாக நம்புகிறேன். ஆமென்.

நம்பிக்கை அறிக்கை (பெரியது):

Image
(ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் திருப்பலியில் சொல்ல வேண்டிய செபம் ) ஒரே கடவுளை நம்புகிறேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார். ("மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்) தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி,எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன்...

தேவ அன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் செபம்

Image
என் ஆண்டவளே! என் அன்னையே! இதோ என்னை முழுவதும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். உம் மீது நான் கொண்ட பக்தியைக் காட்டுவதற்காக, இன்று என் கண்களையும், காதுகளையும், வாய், இதயத்தையும், என்னை முழுவதும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் அன்பு அன்னையே, நான் உமக்குச் சொந்தமாக இருப்பதால், என்னை உமது உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும். ஆமென்.

Yutha Varkam Aninthu – யுத்த வர்க்கம் அணிந்து

Image
யுத்த வர்க்கம் அணிந்து போர் செய்வேன் துணிந்து வெல்லப்போகிறேன் நான் வெல்லப்போகிறேன் (2) இயேசுவின் பெலத்தால் பாவத்தை வெறுத்து சாபத்தை தொலைத்து போர்செய்யப்போகிறேன் இயேசுவின் பெலத்தால்

விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவையென் மேன்மை - Vinthai Kiristhesu Raajaa!Unthan Siluvaiyen Maenmai

Image
விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு, மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை

தேவ ஆவியே தூய ஆவியே – திவ்யபிரசன்னத்தால் தாகம் தீருமே - thaeva aaviyae thooya aaviyae – thivyapirasannaththaal thaakam theerumae

Image
தேவ ஆவியே தூய ஆவியே – திவ்ய பிரசன்னத்தால் தாகம் தீருமே 1.ஆறுதல் அளிப்போனே தேற்றரவாளனே அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே 2.சத்திய ஆவியே சக்தியும் அளிப்போனே சாட்சி பகர்வோனே சத்தியர் இயேசுவே 3.புறாவின் ரூபமே பிதாவின் மகிமையே புதிய எண்ணெயால் புதுப்பித்தருளுமே 4.ஆண்டவர் ஆலயமாம் எங்களின் இதயமே ஆவியின்வாசஸ்தலம் தூய்மைப்படுத்துமே

ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே - aaviye thooya aaviye

Image
ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே 1. சுகம் தாரும் தேவ ஆவியே பெலன் தாரும் தூய ஆவியே 2. ஜெயம் தாரும் தேவ ஆவியே வரம் தாரும் தூய ஆவியே 3. தாயிலும் மேலாக நேசித்தீரே தந்தையிலும் மேலாக அரவணைத்தீர் 4. யாருமே இல்லாமல் தவிக்கும்போது நீரே வந்து என்னை ஆதரித்தீர்

ஆவியிலே புதுமை அடைவோம் - அருள் ஆழியிலே மூழ்கிக் களிப்போம் - Aavileaye Pudumai Adaivom Arul Aaliyiley

Image
ஆவியிலே புதுமை அடைவோம் - அருள் ஆழியிலே மூழ்கிக் களிப்போம் இயேசுவுக்கு சான்று பகர்வோம் - அவர் சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம் 1. அன்பு என்னும் ஆடையணிவோம் - நல்ல ஆனந்த அமைதி அடைவோம் ஆதி சபை வாழ்க்கையினை ஆண்டவரின் ஆவியிலே வீதியெங்கும் கண்டு களிப்போம் 2. வேதனையாம் அலைகள் ஓங்கலாம் - பெரும் சோதனையாம் புயலும் வீசலாம் இறைவன் நம்மைக் காக்கின்றார் இன்பமுற அழைக்கின்றார் நிறைவாழ்வு இன்று அடைவோம் 3. பிரிவினையாம் நோய்கள் தீரும் - இனி குறுகிய நம் பார்வை மாறும் இறையரசின் கொடைகளையும் புனித அருங்குறிகளையும் இல்லங்கள் கண்டு மகிழும்  

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே அல்லேலூயா அல்லேலூயா - Aaviyanavarey Yennai Neerapidumey Hallelujah hallelujah

Image
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே அல்லேலூயா அல்லேலூயா 1. உண்மையின் ஆவி உயிருள்ள ஆவி நீதியின் ஆவி நேர்மையின் ஆவி 2. ஞானத்தின் ஆவி நேசத்தின் ஆவி ஒளியின் ஆவி ஒற்றுமையின் ஆவி 3. சாந்தத்தின் ஆவி சத்தியத்தின் ஆவி வல்லமையின் ஆவி மீட்பின் ஆவி

ஆவியானவரே ஆவியானவரே‌ அபிஷேகம் செய்யும் ஆவியானவரே -Aavi Yanavarey Abiseegam Seium Aaviyanavarey

Image
ஆவியானவரே ஆவியானவரே அபிஷேகம் செய்யும் ஆவியானவரே உம் திருக்கொடைகளால் எம்மை நிரப்பும் 1. ஆரோனை அபிஷேகம் செய்தவரே குருகுலமாய் தெரிந்து கொண்டவரே 2. ஏசாவை அபிஷேகம் செய்தவரே தீர்க்கதரிசியாய் தெரிந்தவரே 3. தாவீதை அபிஷேகம் செய்தவரே இஸ்ரயேலின் அரசனாய் தெரிந்தவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே - AaviYanavarey Anbin Aavi Yanavaerey Ippo Varum Irangi Varum

Image
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே 1. உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே 3. ஆவியின் வரங்களினால் எம்மையும் நிரப்பிடுமே எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

ஆவியான தேவனே அசைவாடுமே அருள்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே - Aavi Yana Devaney Asaivadumey

Image
ஆவியான தேவனே அசைவாடுமே அருள்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே வாரும் ஆவியே தூய ஆவியே 1. தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம் திருக்கரத்தின் வல்லமையைப் பொழிந்திடுமய்யா 2. ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என் சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா 3. தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என் துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா  

அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே - Appa Pidathavey Anbana Deva

Image
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே 1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி 2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் 3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காகச் சிந்தி கழுவி அணைத்தீரே 4. இரவும் பகலும் அய்யா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே 5. ஒன்றை நான் கேட்டேன் - அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவேன்

பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் - Payanthu Kartharin Paathai Yanil Panninthu

Image
                         பல்லவி  பயந்து கர்த்தரின் பாதை யதனில்  பணிந்து நடப்போன் பாக்கியவான்                       அனு பல்லவி   முயன்று உழைத்தே பலனை உண்பான்  முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்                          சரணங்கள்  உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்  தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்  கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்  எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்  ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே  உயரும் பச்சிளங் கன்றுகள் போலே  மெலிவிலா நல்ல பாலருன் பாலே  மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே  கர்த்தரின் வீட்டை கட்டாவிடில் அதைக்  கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை  கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்  கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

ஐயனே உமது திருவடிகளுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் - Iyaney Umathu Thiruvadikaukikey

Image
1.ஐயனே ! உமது திருவடி களுக்கே  ஆயிரந்தரந் தோத்திரம் !  மெய்யனே ! உமது தயைகளை அடியேன்  விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்  சேர்ந்தர வணைத்தீரே: அந்தடைவாயிப் பகலிலுங்  கிருபையாகவா  தரிப்பீரே. 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும்    கருணையாய்  என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்த    நாளெல்லாம்  நீர் காரும்.  தீவினை விலகி நான் திருமுகம் நோக்க தெய்வமே, அருள் கூரும். 5.கைகாலால் நான் பவம் புரியாமல்   சுத்தனே துணை நில்லும்   துய்யனே, உம்மால் தான் எனதிதயம்   தூய் வழியே செல்லும். 6. ஊழியந்தனை நான்  உண்மையாய்ச் செய்ய உதவி நீர் செய்வீரே. ஏழைநான் உமக்கே  இசையானால் ஆவி  இன்பமாய்ப் பெய்வீரே. 7.  அத்தனே ! உமது மகிமையை நோக்க  அயலான் நலம் பார்க்கச்  ...

ஆசிரியரின் செபம்

Image
ஆண்டவராகிய இயேசுவே ! குழந்தையின் உள்ளத்தை உருவாக்கும் உன்னத பணியை எனக்கு அளித்திருக்கிறீர். என் சொல்லும் செயலும் ஒரு குழந்தையின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிகின்றன, என்றென்றும் வாழ ஏதுவான பண்புகளை அவர்களிடம் வளர்க்கின்றன என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே, பாடத் தயாரிப்பிலும் பாடப் போதனையிலும் நான் பெருமுயற்சி எடுக்க எனக்கு உதவியாயிரும். அவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதில் கண்டிப்புக் காட்டும் அதே நேரத்தில், அவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பேனாக. அவர்களின் சிந்தனைத் திறனைச் சீராக வளர்த்திட நான் உதவுவேனாக. அவர்களிடம் உம்மையே கண்டு, உம் சாயலை அவர்களிடம் உருவாக்கும் அரிய பணியில் அயர்ந்து விடாமல் உழைக்க, நீர் என்றும் என்னோடு இருந்தருளும். -ஆமென்.

ஊர்தி ஓட்டுநரின் செபம்

Image
அன்புள்ள இறைத் தந்தையே ! உம்மைத் தொழுது நன்றி செலுத்துகிறேன். இந்த வாகனத்தை ஓட்டும் பொறுப்புமிக்கப் பணியை எனக்கு கொடுத்து, என்னைப் பராமரித்து வருவதற்காக நன்றி செலுத்துகிறேன். இந்த ஊர்தியைக் கவனமாக ஓட்ட எனக்கு உதவி புரிவீராக. இதில் பயணம் செய்வோரையும் ஆசீர்வதித்துக் காத்தருளும். இறை இயேசுவே ! எம் அன்னையை எங்களுக்கு அன்னையாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறேன். இறை அன்னையே ! என் அன்பு அம்மா ! அன்று இறைபாலனைப் பத்திரமாக ஏந்தி எகிப்துக்கு பயணமானீரே அதுபோல இன்று நான் ஓட்டுகிற இந்த ஊர்தியையும் உம் கைகளில் ஏந்தி, நாங்கள் சேர வேண்டிய இடத்தைப் பாதுகாப்புடன் சென்றடைய உதவியருளும். எங்கள் காவல் தூதர்களே ! எங்களுக்காக இறைவனை மன்றாடுங்கள். இந்தச் சாலையில் பயணம் செய்யும் ஏனைய ஊர்திகளின் ஓட்டுநரும் பாதசாரிகளும் பொறுப்புணர்ந்து கடக்க உதவி புரியும். நல்ல பயணத்தின் அன்னையே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித கிறிஸ்டோபரே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.

சிலுவை சுமந்த என் இயேசு சிந்தின இரத்தம் புரண்டோடியே - Siluvai Sumanthw Yen Yesu Sinthina Iratham

Image
சிலுவை சுமந்த என் இயேசு சிந்தின இரத்தம் புரண்டோடியே  நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோஷம் பூவினில்  கர்த்தாவின் அன்பண்டையில் வா ஆத்தும  மீட்பை பெற்றிடாமல் ஆத்மம் நஷ்டமடைந்தால் லோகம் முழுதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் நித்ய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்ச வாழ்வில் தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய் தாகமடைந்தோர்  எல்லாருமே தாகத்தை தீர்க்க வாரும் ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்

காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே - Kaakum Yenthan Anbu Deivamey Kalam Thoorum

Image
காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே எம்மைக் காத்திடுவாய் 1. துன்பதுயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே உள்ளம் நொறுங்கி உடையும் வேளை உன்னைத் தேடி ஓடி வந்தேன் கருணை தெய்வமே கரங்கள் தாருமே 2. விடியல் நோக்கி நெருப்புத் தூணாய் பாலைநிலத்தில் நடத்தினாய் கடலை அடையத் துடிக்கும் ஆறாய் உந்தன் வழியாய் நடக்க வந்தேன் உடனே வாருமே உதவி தாருமே

அன்பே எந்தன் ஆருயிரே அன்பால் உயிரைத் தந்தனையோ - Anbe Yenthan Aaruirey Anbal Uyiraith Thanthanaiaye

Image
அன்பே எந்தன் ஆருயிரே அன்பால் உயிரைத் தந்தனையோ துன்பம் உனக்கு நான் தந்தேன் - மன்னித்து என்னை ஏற்பாயே 1. சிலுவை உனக்கு அரியணையோ சிந்திய ரத்தம் மேலாடையோ கூரிய முள்தான் உன் முடியோ கூடிய காயம் உன் அழகோ 2. கரங்கள் விரித்து இருப்பதேனோ கனிவுடன் உன்னோடணைத்திடவோ கண்களில் இன்னொளி குன்றியதேனோ காரிருள் நின்று மீட்டிடவோ 3. உலகில் சிலுவைப் போதனையோ உயர்ந்ததாய் நீயும் தந்தனையோ நண்பனுக்காய் உயிர் தருவதைப்போல் அன்பில்லை என்று உரைத்தனையோ

கல்வாரி மலையை நோக்கி தெய்வமே நீ தன்னந்தனியே தரையில் விழுந்து சிலுவை - Kalvari Malaiaye Noki Deivamey Nee Thananthaniaye Tharaiyil

Image
கல்வாரி மலையை நோக்கி தெய்வமே நீ தன்னந்தனியே தரையில் விழுந்து சிலுவை சுமப்பதும் ஏன் முத்தமிட்டு நண்பனே காட்டி கொடுத்த துரோகமோ புதிய உலகம் புதிய இதயம் காணும் லட்சிய நோக்கமோ 1. பாவி என்று யாரையும் நீ வெறுக்கவில்லை  தவறு செய்தால் தட்டிகேட்க மறுத்ததில்லை  உந்தன் குரலை கேட்டும் நீதிகேட்டு பயந்தனர் மிகப்பெரியவர் உன்னை பாரும் அந்த சிலுவை மரத்தில் அறைந்தனர் அந்த கொடியவர் அன்பு செய்தவன் நீ ஈர நெஞ்சவன் நீ தந்தாய் இவர்களை மன்னியும் தெரியாமல் செய்கிறார்கள் என்ற உன் மனது பெரியது உந்தன் இதயமும் பெரியது   2. சாதி என்றும் மதங்கள் என்றும் - பிரிக்கும் உலகில் பணம் பதவி மோகம் என்றும் மோதும் உலகில் இந்த குறையை நீக்க அன்பு என்னும் பெயரை தந்தவர் நீர் அன்றோ அன்புக்காக சிலுவை மரத்தில் ரெத்தம் சிந்தியது நீயன்றோ உடலை தந்தவன் நீ உயிரை ஈந்தவன் நீ நண்பனுக்காக உயிரையும் தந்திடும் அன்பே - உயர்ந்தது அதை தந்த உன் அன்பு உயர்ந்தது இதிலும் பெரியது வேறில்லை 

அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே - Arul Tharum Yesuvey Sugam Peruven Yesuvey Oru Varthai Pesumey yen Vazlvu Nalamagum

Image
அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே -2 ஆராதனை -2 ஆராதனை செய்கிறோம் (2) தாவீதின் திருமகனே தயைகூர்ந்து இறங்குமையா -2 கடைக்கண்ணால் எமைப் பாருமே கருணைக்கடல் இயேசுவே 1. நீர் தொடுவாய் இயேசுவே நோய்களையே இயேசுவே -2 ஆசீர்வதிப்பாய் இயேசுவே மீட்புப்பெறுவேன் இயேசுவே -2 2. மார்போடு அணைத்துக்கொண்டு மன்னித்து வாழ்வு தரும் -2 திருந்தி உன்பாதத்தில் என் குற்றம் ஏற்றுக்கொள்ளும் -2

பாடுவாய் என் நாவேமாண்புமிக்க உடலின் இரகசியத்தை - Paduvai Yen Naveymanpumikka Udalin

Image
பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம் பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த தேவ இரத்த இரகசியத்தை என்றன் நாவே பாடுவாயே 1. அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று நமக்கு என்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து அரிய தேவ வார்த்தையான வித்ததனை விதைத்த பின்னர் உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார் 2. இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும் அவரமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்கு தம்மைத் தாமே திவ்ய உணவாய் தம் கையாலே அருளினாரே 3. ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம் அதனைச் சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும் மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும் நேர்மையுள்ளம் உறுதி கொள்ள மெய்விசுவாசம் ஒன்றே போதும் 4. மாண்புயர் இந்த அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதர் இதனை அறிய இயலாக் குறையை நீக்க வி...

அன்பின் தேவன் அழைக்கின்றார் ஒன்று கூடுவோம் - Anbin Devan Azlaikintar ontu kooduvom

Image
அன்பின் தேவன் அழைக்கின்றார் ஒன்று கூடுவோம் ஆனந்தமாய் இயேசு பாதம் நாடிச் செல்லுவோம் உறவின் வழியில் இறைவன் ஆட்சி மலரச் செய்யவே மகிழ்வின் பலியில் அருளை வேண்டுவோம் 1. மதங்களில் புதைந்தோம் மனிதத்தை மறந்தோம் வேற்றுமை வளர்த்தோம் இறைமையைத் தொலைத்தோம் உள்ளங்கள் தெளிந்து உனதில்லம் வருகின்றோம் உனதன்பு பலியிலே எமை ஏற்றிடுவாயே புதுவாழ்வு மலரவே எமை மாற்றிடுவாயே இறைவாழ்வு தரும் பலியினில் இணைவோம் 2. பகைமையை வளர்த்தோம் பாசத்தைத் தொலைத்தோம் பாரினில் மாந்தர் உறவினை சிதைத்தோம் புதுயுகம் படைக்கவே பலியினில் இணைகின்றோம் உன் புனித பலியிலே எமை இணைத்திடுவாயே அருள்வாழ்வில் மகிழவே எமை மாற்றிடுவாயே சிலுவை பலியில் சிறந்திட விரைவோம்

அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் - Anbum Natpum Yenkullatho Angey Iraivan Irukintar

Image
அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் 1. கிறிஸ்துவின் அன்பு நமையெல்லாம் ஒன்றாய் கூட்டிச் சேர்த்ததுவே அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்ச்சி கொள்வோமே ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம் நேரிய உள்ளத் துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம் 2. எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே தீய சச்சரவுகள் ஒழிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக நமது மத்தியில் நம் இறைவன் கிறிஸ்து நாதர் இருந்திடுக 3. முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம் மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும் அளவில்லாத மாண்புடைய பேரானந்தம் இதுவேயாம்

மீட்புக்காக நன்றி கூறிடுவேன் ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்- Meethipukaga Nantri Kooriduven Andavarin Thirupeiyarai

Image
மீட்புக்காக நன்றி கூறிடுவேன் ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன் 1. ஆண்டவர் எனக்கு நன்மைகள் செய்தார் நான் என்ன கைம்மாறு செய்வேனோ நான் போற்றிடுவேன் ஆ பாடிடுவேன் ஆ புகழ்ந்திடுவேன் 2. என்மீது அவரது அருளன்பு நிலைத்தது புகழ்ச்சி பலியினைச் செலுத்திடுவேன் 3. அவரே என் வலிமையும் திடமுமாய் இருக்கிறார் அவரே எனக்கு மீட்பானார்

இறைவன் படைத்த நாளில் இணைவோம் இயேசு பெயரில் - Iraivan Padaitha Naalil Inaivom Yesu Peiyaril

Image
இறைவன் படைத்த நாளில் இணைவோம் இயேசு பெயரில் இறைவனின் அன்பில் இறைமக்களாவோம் கிறிஸ்துவில் இன்று புது வாழ்வு காண்போம் -2 ஆஆ 1. உலகம் எல்லாம் ஓர்குலமாய் இணைந்திட இறைவன் நினைத்தாரே (2) அது நனவாகிட நம்மில் நிறைவேறிட -2 அன்பாலே தேர்ந்தெடுத்தார் 2. கோடான கோடி மாந்தரிலே கோமகன் நம்மை தேர்ந்தாரே -2 அவர் அன்பானது நம் உயிரானது -2 அன்பாகச் சேர்ந்திடுவோம்

உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - Ummidam Adaikalam Pugunthen Iraiva Ummidam

Image
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் (2) அன்பு தேவன் நீ அருகிருக்கையில் ஆறுதலை அடைந்திடுவேனே உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே 1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம் அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம் நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுங்கலாம் தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம் இறைவா நீ என்னைக் கைவிடாய் துணையாய் நீ என்னுள் உறைந்திட்டாய் ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன் 2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம் உரிமை காக்க உழைப்பதனால் உயிரைச் சிதைக்கலாம் பொதுநலனைப் பேணுவதால் பெயரை இழக்கலாம் வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம் இறைவா நீ ... ...  

உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் - Unakaga Maritheney yenakaga nee yenna Seithai

Image
உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் - 2 1. திருந்துவாய் என்று நான் நினைத்தேன் நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் -2 நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய்  ‌ 2. சுமைகளால் சோர்ந்தோரே வருகவென்றேன் சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் -2 சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் 3.முழு முதல் கடவுளை தேடச் சொன்னேன் முதல்முறை தரையில் தள்ளி விட்டாய்-2 முதல்முறை தநையில் தள்ளி விட்டாய் 4. அருள் மிக நிறைந்த என் தாயே சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் - 2 சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் 5. என் சிலுவையை சுமக்க நான் உன்னை தேடினேன் சீமோனை காட்டி நீயும் ஒளிந்துக் கொண்டாய் - 2 சீமோனை காட்டி நீயும் ஒளிந்துக் கொண்டாய் 6. முகத்தை துடைத்தாள் என் முகம் தந்தேன் இதம் அகம் சரிபாதி ஏற்க மறுத்தாய் - 2 இதம் அகம் சரிபாதி ஏற்க மறுத்தாய் 7. எழுந்து வா திருந்தி வா என்றழைத்தேன் இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் - 2 இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் - 2 8. அழுதார் அழுதார் அன்புடையார் ஐயோ அதையும் கேலி செய்தாய் - 2 ஐயோ அதையும் கேலி செய்தாய்  9. உறவே உறவே மனிதம் என்றேன் உடைத்து உடைந்து தள்ளி விட்டாய் - 2 உடைத்து உடைந்த...

நன்றியால் துதிபாடு நம் இயேசுவே நாவாலே என்றும் பாடு - nantiyaal thuthipaadu – nam Yesuvaenaavaalae entum paadu

Image
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே நாவாலே என்றும் பாடு வல்லவர் நல்லவர் போதுமானவார் வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி எரிகோ மதிலும் முன்னே வந்தாலும் இயேசு உந்தன் முன்னே செல்கிறார் கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்து விழும் செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும் சிலுவையின் நிழலுண்டு பாடிடுவோம் துதித்திடுவோம் பாதைகள்ன் கிடைத்துவிடும் கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும் கொஞ்சமும் பயம் வேண்டாம் இயேசு என்னும் நாமம் உண்டு இன்றே ஜெயித்திடுவோம்

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் - Ananthamaga Anbarai Paduven

Image
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவரென் ஆத்துமாவிற்கே ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும் ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் வேறெங்குமில்லையே தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும் தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால் தாபரமும் நல்ல நாதனுமென்றார் கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே கிருபையும் வெளியாகினதே நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் ஜீவன் அழியாமை வெளியாக்கினார் ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாகவே அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம் அழுகையின் தாழ்வில் நடப்பவரை ஆழிபோல் வான் மழை நிறைக்குமே சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்

கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே - Kartharin namamey Palamana Thurukamey

Image
1. என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே எந்தனின்‌ தாகம்‌ தீர்க்கும்‌ கன்மலையம்‌ இயேசவே ஒளிமயமான எதிர்காலம்‌ ஒன்றை நாடியே உலகெல்லாம்‌ அலைந்தலைந்து தேடியும்‌ நான்‌ காண்கிலேன்‌                                     பல்லவி   கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே   நான்‌ அங்கே ஓடியே சுகமாகத்‌ தங்குவேன்‌   கர்த்தரின்‌ செட்டையின்கீழ்‌ அடைக்கலம்‌ வந்ததால்‌   நிறைவான ஆறுதல்‌ பலனும்‌ அடைவேனே 2. கர்த்தரின்‌ காருண்யம்‌ அதெத்தனை பெரியதே கர்த்தரின்‌ செளந்தரியம்‌ அதெத்தனை பெரியதே என்‌ கண்கள்‌ இராஜாவை மகிமையோடு காணுமே தூரத்தில்‌ உள்ள தேசமாம்‌ சீயோனைக்‌ காணுமே -- கர்த்தரின்‌ 3. உம்மிலே பெலனைடையும்‌ மாந்தர்‌ பாக்கியவான்‌௧ளே உந்தனின்‌ வீட்டில்‌ வாசம்‌ செய்வோர்‌ பாக்கியவான்‌௧ளே அழுகையின்‌ பள்ளத்தாக்கை நீரூற்றாக்கிக்‌ கொள்ளுவார்‌ பெலத்தின்மேல்‌ பெலனடைந்து சீயோன்‌ வந்து சேருவார்‌ -- கர்த்தரின் 4. பகலின்‌ வெயிலிலே எனக்கு நிழலானீரே எர்த்தரின்‌ இரவின்‌ இருளிலே என்‌ வெளிச்சமாய்‌ உதித்தீரே தா...

இயேசுவே உம்மைப் போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் - Yesuvey Ummai Polaga Vanchikuthey

Image
இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் என் ஆவி ஆத்மா சரீரம் முற்றும் படைத்து விட்டேன் என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே பெலமதை தாருமையா – உந்தன் உபத்திரவம் உண்டு உலகினில் என்று உலகத்தை வென்றேனென்றீர் உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே பெலமதை தாருமையா – உந்தன் சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன் அல்ல என் சீஷன் என்றீர் எந்தன் சிலுவையை நான் சுமக்க பெலமதைத் தாருமையா – உந்தன் தலைசாய்க்க தலமில்லை தரணியில் உறவில்லை நிலையில்லா பூவில் என்றீர் நானும் உம்மைப் போல தியாகம் செய்ய பெலமதைத் தாருமையா – உந்தன் சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும் தேவாட்டுக்குட்டி நீரே சீயோனில் உம்முடன் நானிருக்க உம்மைப் போல் மாற்றும் ஐயா – என்னை

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் - Enakoththaasai Varum Parvatham

Image
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானம் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே என் காலைத் தள்ளாடவொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் ராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய்.

Ennai Marava Yesu Naatha - என்னை மறவா இயேசு நாதா

Image
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமதே 2. பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் உன்னதா எந்தன் புகலிடமே 4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடுமே 5. என்னை முற்றும் ஒப்புவித்தேன் ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னைச் சேர்த்திடும்.

இயேசுவின் நாமம் ஜெய நாமம் / yesuvin namam jeya namam

Image
இயேசுவின் நாமம் ஜெய நாமம்  நேசிக்க சிறந்ததோர் இன்ப நாமம்  சர்வத்தையும் ஜெயித்த உயர்ந்த நாமம்  சதாகாலம்  ஜெயத்தோட காக்கும் நாமம்  ஜெயம் ஜெயம் அல்லேலூயா  ஜெயம் ஜெயம் நமக்கே (2) - இயேசுவின் நாமம் பாரங்கள் பாவங்களை போகும் நாமம்  பரிசுத்தமாக்கிடவும் கழுவும் நாமம்  சகல நோய்களையும் சிலுவையில் சுமந்த  சர்வாங்க சுகமதை தரும் நாமமே - இயேசுவின் நாமம் சாபமே நீங்கி ஆசீர்வாதம் பெறவே  சாத்தானின் கோட்டைகளை தகர்க்கும் நாமம்  சத்ருவின் சகல வல்லமையை ஜெயிக்க  சர்வாயுதவர்கம் தரித்திடுவோமே - இயேசுவின் நாமம் மண்ணதில்  அதிசயம் காணச்செய்யும்  விண் புவியில் அதிகாரம் உடைய நாமம்  எல்லா முழங்கால்களும் முடங்கிட செய்திடும்  வல்லவரின் நாமமே அதிசயமே  - இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலமவர் திவ்ய நாமமே  உத்தமரும் கன்னியரும் நேசிக்கும் நாமம்  ஊற்றிடும் தம் ஆவியால் ஜெயக்கொடி ஏற்றியே  உலகெங்கும் சாட்சியை மாற்றும்  நாமமே  - இயேசுவின் நாமம் கர்த்தரின் நாமமே பலத்த துரோகம்  சுத்தர் ஓடி அதற்குள் சுகமாயிருப்பா...