ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம், Ovaoru Pakirvum Punnitha Veyaalanam.

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம்
அந்த இயேசுவை உணவாய் உண்போம்
இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம் (2)

1. இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம்
இறுதியில் வெல்லுமே (2)
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே (2)
நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம் -2
நாளைய உலகின் விடியலாகவே

2. பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே
புனிதமாய் நிலைத்ததே (2)
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும்
இறையன்பின் சாட்சிகளே (2)
இதை உணர்வோம் நமைப் பகிர்வோம் -2
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு