தேவ அன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் செபம்
என் ஆண்டவளே! என் அன்னையே! இதோ என்னை முழுவதும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். உம் மீது நான் கொண்ட பக்தியைக் காட்டுவதற்காக, இன்று என் கண்களையும், காதுகளையும், வாய், இதயத்தையும், என்னை முழுவதும் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் அன்பு அன்னையே, நான் உமக்குச் சொந்தமாக இருப்பதால், என்னை உமது உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும். ஆமென்.
Comments