ஆசிரியரின் செபம்

ஆண்டவராகிய இயேசுவே ! குழந்தையின் உள்ளத்தை உருவாக்கும் உன்னத பணியை எனக்கு அளித்திருக்கிறீர். என் சொல்லும் செயலும் ஒரு குழந்தையின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிகின்றன, என்றென்றும் வாழ ஏதுவான பண்புகளை அவர்களிடம் வளர்க்கின்றன என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே, பாடத் தயாரிப்பிலும் பாடப் போதனையிலும் நான் பெருமுயற்சி எடுக்க எனக்கு உதவியாயிரும்.

அவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதில் கண்டிப்புக் காட்டும் அதே நேரத்தில், அவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பேனாக. அவர்களின் சிந்தனைத் திறனைச் சீராக வளர்த்திட நான் உதவுவேனாக. அவர்களிடம் உம்மையே கண்டு, உம் சாயலை அவர்களிடம் உருவாக்கும் அரிய பணியில் அயர்ந்து விடாமல் உழைக்க, நீர் என்றும் என்னோடு இருந்தருளும். -ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு