உனக்காக நான் மரித்தேனே / unakaga naan marithene

உலகோர் உன்னைப் பகைத்தாலும்

உண்மையாய் அன்பு கூறுவாயா?
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா?
உந்தன் சிலுவை சுமப்பாயா?

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
எனக்காக நீ என்ன செய்தாய்


உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா?
ஊழியம் செய்ய வருவாயா?

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
எனக்காக நீ என்ன செய்தாய்


மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி போகிறாயா?
மேன்மையை நாடி போகிறாயா?

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
எனக்காக நீ என்ன செய்தாய்


இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா?
ஜீவ அப்பம் கொடுப்பாயா?

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
எனக்காக நீ என்ன செய்தாய்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு