இயேசுவே உம்மைப் போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் - Yesuvey Ummai Polaga Vanchikuthey

இயேசுவே உம்மைப்போலாக
வாஞ்சிக்குதே என்னுள்ளம்

என் ஆவி ஆத்மா சரீரம்
முற்றும் படைத்து விட்டேன்
என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே

பாவமறியாது பாவமே செய்யாது
பாரினில் ஜீவித்தீரே
பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
பெலமதை தாருமையா – உந்தன்

உபத்திரவம் உண்டு உலகினில் என்று
உலகத்தை வென்றேனென்றீர்
உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே
பெலமதை தாருமையா – உந்தன்

சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
அல்ல என் சீஷன் என்றீர்
எந்தன் சிலுவையை நான் சுமக்க
பெலமதைத் தாருமையா – உந்தன்

தலைசாய்க்க தலமில்லை
தரணியில் உறவில்லை
நிலையில்லா பூவில் என்றீர்
நானும் உம்மைப் போல தியாகம் செய்ய
பெலமதைத் தாருமையா – உந்தன்

சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும்
தேவாட்டுக்குட்டி நீரே
சீயோனில் உம்முடன் நானிருக்க
உம்மைப் போல் மாற்றும் ஐயா – என்னை

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு