ஏறுகிறார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் ஏசு குருசை சுமந்தே, Yerukirar Thalladi Thavalnthu kalaipodey

ஏறுகிறார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
என் ஏசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்கிறார்
அந்தப் பிலாத்தும் கையை கழுவி
ஆண்டவரை அனுப்புகிறேன்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வந்தே
இரட்சகரை நோக்கியே பார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ ஏசு நாதரை
நேசித்து வா குரு செடுத்தே

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குரவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்

பின்னே நடந்தே அன்பின் சீஷன்போல்
பின்பற்றிவா சிலுவை வரை
காடியைபோல் கசந்திருக்கும்
கஷ்டங்கள் அவரிடம் சொல்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்த தாயின் அன்பதுவே
எருசலேமே எருசலேமே
என்றழுதார் கண்கலங்க

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு