ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகத்துவ தம்பரா பரா, Aamen Allaeluuyaa Aamen AllaeluuyaaMakaththuva Thamparaa Paraa
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
மகத்துவ தம்பரா பரா – ஆமென் அல்லேலூயா
ஜெயம் ஜெயம் ஆனந்த ஸ்தோத்திரா
ஆம் அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே
1. வெற்றி கொண்டார்ப்பரித்து கொடும்
வேதாளத்தை சங்கரித்து முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டு தரித்து முடித்தார்
2. வேதம் நிறைவேற்றி மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி -பொய் மாற்றி
பாவிகளை தேற்றி கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
3. சாவின் கூர் ஒடிந்து மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து-விழுந்து
ஜீவனை விடிந்து தேவாலயத்
திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது
4. தேவக் கோபந்தீர்ந்து அலகையின்
தீமை எல்லாம் சேர்த்து முடிந்தது
ஆவலுடன் சேர்ந்து பணிந்து
கொண்டாடி களி கூர்ந்து மகிழ்ந்து
Comments