ஒப்புரவு அருள் அடையாள செபம்:
எல்லாம் வல்ல இறைவனிடமும், எப்பொழுதும் கன்னியான தூய மரியாவிடமும், அதிதூதரான தூய மைக்கேலிடமும், திருமுழுக்கு யோவானிடமும், திருத்தூதர்களான தூய பேதுரு, தூய பவுலிடமும், புனிதர் அனைவரிடமும், தந்தையே உங்களிடமும், நான் பாவி என்று ஏற்றுக் கொள்கிறேன். எனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்பொழுதும் கன்னியான தூய மரியாவையும், அதிதூதரான தூய மைக்கேலையும், திருமுழுக்கு யோவானையும், திருத்தூதர்களான தூய பேதுரு, தூய பவுலையும், புனிதர் அனைவரையும், தந்தையே உங்களையும், நம் தேவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன். ஆமென்.
Comments