Posts

Showing posts from May, 2023

எதிர்நோக்கு மன்றாட்டு

Image
என் இறைவா, நீர் தந்துள்ள வாக்குறுதிகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமது அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறேன். ஆமென்.

இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் சிலுவையே முன்னால் உலகமே பின்னால், Yesuvin pinnaal naan selvaenthirumpi paarkka maattaen siluvaiyae munnaal ulakamae pinnaal

Image
இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் சிலுவையே முன்னால் உலகமே பின்னால் இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே 1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று எல்லாம் உதறி விட்டேன் உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும் ஒப்புக் கொடுத்து விட்டேன் நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் எப்போதும் துதித்தீடுவேன் 2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள் எதுவும் பிரிக்காது வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் முற்றிலும் ஜெயம் பெறுவேன் நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ வாழ்வோ சாவோ வல்ல தூதரோ பிரிக்கவே முடியாது 3. அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு ஆட்சி செய்திடணும் ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் சபைகள் பெருகிடணும் என் சொந்த தேசம் இயேசுவுக்கு இயேசுதான் வழி என்கிற முழக்கம் எங்கும் கேட்கணுமே 4. பழையன கடந்தன புதியன புகுந்தன பரலோக குடிமகன் நான் மறுரூபமாகி மணவாளன் இயேசுவை முகமுகமாய் காண்பேன் இதயமெல்லாம் ஏங்குதைய்யா இயேசுவே உந்தன் அன்பு நதியிலே எந்நாளும் நீந்தணுமே

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை, yosanaiyil periyavarae aaraathanai aaraathanai seyalkalil vallavarae aaraathanai aaraathanai

Image
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா கண்மணிபோல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை தேடி என்னைக் காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக் கல்லே ஆராதனை ஆராதனை

இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை, Yesu neenga irukkaiyilaenaanga sornthu povathillai

Image
இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க 1. சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே 2. அதிசய தேவன் ஆலோசனைக் கர்த்தர் 3. தாயும் தகப்பனும் தாங்கும் சுமைதாங்கி 4. எனக்கு அழகெல்லாம் எனது ஆசையெல்லாம் 5. இருள் நீக்கும் வெளிச்சம் இரட்சிப்பின் தேவன் 6. எல்லாமே எனக்கு எனக்குள் வாழ்பவரும் 7. முதலும் முடிவும் முற்றிலும் காப்பவர் 8. வழியும் சத்தியமும் வாழ்வளிக்கும் வள்ளல் 9. பாவ மன்னிப்பு பரிசுத்த ஆவியும்

எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன், Enathu Manavalaneenathu manavaalanae en ithaya aekkamaeiniyavarae iyaesaiyaa

Image
எனது மணவாளனே என் இதய ஏக்கமே இனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன் – நான் உம்மைத் தான் நேசிக்கிறேன் 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என் உள்ளமெல்லாம் துள்ளுதையா உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா (2) 2. உம் முகம் பார்க்கணுமே உம் அழகை ரசிக்கணுமே உம் பாதம் அமரணுமே உம் சித்தம் அறியணுமே 3. என் வாயின் சொற்களெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக என் இதய எண்ணமெல்லாம் உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு) 4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக எழிலெல்லாம் ஏமாற்றும் உம் அன்பு மாறாதையா ஒரு நாளும் அழியாதையா 5. நான் பார்க்கும் பார்வையெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக நான் நடக்கும் பாதையெல்லாம் உகந்தனவாய் இருப்பதாக

உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா, Ummodu Irupathu Thaanummodu iruppathuthaan ullaththin vaanjaiyaiyaaum siththam seyvathu thaan

Image
உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே 4. மன்னிப்பதில் வள்ளல் நீரே சுகம் தரும் தெய்வம் நீரே உம் அன்பையும் இரக்கத்தையும் மணி முடியாய் சூட்டுகின்றீர்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன், ummai Nnokkip paarkkintenummai ninaiththu thuthikkinten

Image
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசையா ஸ்தோத்திரம் – (4) சரணங்கள் 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் 2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே 3. நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் – நான் என்னை மறக்கின்றேன்

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலேஊற்றிடுமே உம் அக்கினியை, Ootridume Um Vallavamiayaioottidumae um vallamaiyaiintha naalil engal maelae

Image
ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல இன்றும் செய்ய வேண்டுமே – 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே – 2 3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2 அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே அக்கினியை ஊற்றிடுமே – 2

ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாட, Oppatra En Selvameoppatta en selvamaeo enthan Yesu naathaa

Image
ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசு நாதா உம்மை நான் அறிந்து உறவாட உம் பாதம் ஓடி வந்தேன் – நான் உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும் உம்மோடு ஒன்றாகவும் எல்லாமே குப்பை என எந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமே இயேசுவே நீர் தானன்றோ உமது மகிமை ஒன்றே உள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன் கண்முன்னால் என் இயேசு தான் தொடர்ந்து ஓடுவேன் தொல்லைகள் என்ன செய்யும்

நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார், Nam Yesu Nallavarnam Yesu nallavar orupothum kaividaar

Image
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் சாத்தானை மிதிப்போம் தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார் சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் 2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார் வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் 3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை 4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவை கூப்பிடு உண்மையாய் குறையெல்லாம் நீக்குவார் 5. நண்பனே கலங்காதே நம்பிக்கை இழக்காதே கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை நிற்கிறார் 6. எத்தனை இழப்புகள் ஏமாற்றம் தோல்விகள் கர்த்தரோ மாற்றுவார் கரம்நீட்டித் தேற்றுவார் 7. என் இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே மகிமையில் சேர்த்திட மறுரூபமாக்குவார்

வான் சேனைக்கு அதிபதியே புனிதராம் மிக்கேல் அதிதூதரே, Vaaan Seenaiku Adhipathiaye Punnitharam Micheal Athithootharey

Image
வான் சேனைக்கு அதிபதியே புனிதராம் மிக்கேல் அதிதூதரே வல்லமே மிகுந்த காவலரே எளியோர் வந்தோம் உமை நாடி - (2) தேவ சிம்மாசனம் அதன் முன்னே   மகிமையில் நிற்கும் தளபதியே - (2) பாவ வழியில் யாம் நடந்தாலும் கைவிடாமல் எம்மை காப்பீரே - (2) ‌‌ ‌‌‌‌‌                              ‌.                          - வான்            இறைவனின் கருத்தை உணர்ந்து கொண்டு சிரம் வணங்கி நீர் கீழ்ப்படிந்தீர் - (2) ஆணவம் மிகுந்து ஆர்ப்பரித்த லூசியின் சேனையை முறியடித்தீர் - (2)            ‌‌                                              - வான்

முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை புதிய ஆலய கட்டுமான பணி விரைவில் நிறைவுற மன்றாட்டு

Image
எங்கள் அன்புத் தந்தையே இறைவா! / உம்மை போற்றுகின்றோம் / உம்மை புகழ்கின்றோம் / கடந்த பல நூற்றாண்டுகளாக / முஞ்சிறை புனித ஆரோக்கிய அன்னை / தலத் திருச்சபையின் / மக்களாகிய எங்களை / அருள் வளங்களால் நிறைவு செய்து / வழிநடத்தியதற்காக / உமக்கு நன்றி கூறுகிறோம். / நீர் தங்கி வாழும் / இந்த ஆலயத்தின் / நூற்றாண்டு பெருவிழாவை / சிறப்பாக நடத்தித் தந்தீர் / அதற்காக உளமார நன்றி கூறுகிறோம். என் இல்லத்தை / மீண்டும் கட்டி எழுப்புங்கள் / அது எனக்கு / உகந்ததாய் இருக்கும் / அங்கே நான் / மாட்சியுடன் விளங்குவேன் / என்று ஆகாய் இறைவாக்கினர் வழி / அறிவுறுத்தும் ஆண்டவரே / சிறந்ததோர் ஆலயம் / கட்டி எழுப்பப்பட்ட / ஆவலுடன் உம்முன் பணிக்கிறோம். / எம் நீண்ட / நாள் தேவையே / நிறைவேற்றித் தந்தருள வேண்டுகிறோம். / இதன் வழி / உமது உயிருள்ள ஆலயமாக திகழும் எங்களை / அன்பினால் கட்டி எழுப்பியருளும். எங்கள் தலத்திருச்சபை / அருட்பணி பேரவை / அன்பியங்கள் / குடும்பங்கள்/ ஆலய கட்டுமான பணியில் இணைந்து / ஒற்றுமையுடன் சங்கங்கள், இயக்கங்கள் / இப்பணியில்/ இணைந்து செயல்படவும் / இறைவேண்டல் புரியவும் / வரம் தாரும் / இப்பகுதியில் வாழும...

அன்பு மன்றாட்டு

Image
என் இறைவா நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் அனைத்திற்கும் மேலாக உம்மை நான் முழு மனத்தோடு அன்பு செய்கிறேன். மேலும் என்னை நான் அன்பு செய்வது போல மற்றவரையும் அன்பு செய்கிறேன். ஆமென் 

தூய மரியன்னை ஆலயம் , மண்ணான்விளை

Image
தூய மரியன்னை ஆலயம் இடம்: மண்ணான்விளை, அடைக்காகுழி மாவட்டம்: கன்னியாகுமரி  மறைமாவட்டம்: குழித்துறை நிலை: கிளைப்பங்கு பங்கு: கிறிஸ்து அரசர் ஆலயம் இருதயபுரம்  குடும்பங்கள் - 80 அன்பியங்கள்- 2 ஞாயிறு திருப்பலி - காலை 7 மணிக்கு திருவிழா - செப்டம்பர் மாதம் ஆலய வரலாறு:               அரம்ப காலத்தில் சிறு கூடாரத்தில் இருந்த ஆலயம் மாற்றப்பட்டு பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 2010 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே- Ulagin Paavam Pookum Iraivanin

Image
  உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே எம்மேல் இரக்கம் வையும் எமக்கு அமைதி அருளும்

Act of Contrition

Image
O my God, I am heartily sorry for having offended You and I detest all my sins, because I dread the loss of heaven and the pains of hell, but most of all because they offend you, my God, who are all good and deserving of all my love. I firmly resolve, with the help of your grace, to confess my sins, to do penance and to amend my life

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் - Thooyaadhi thooyavarae – umadhuPugazhai, naan paaduvaen

Image
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி 4. பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி

hrdayam oru man vinayayi patunnu ഹൃദയം ഒരു മണ് വീണയായി പാടുന്നു

Image
ഹൃദയം ഒരു മണ്‍ വീണയായി - പാടുന്നു അലഞൊറിയും ആവേശമായി - ചേരുന്നു (2) ജന്മാന്തരങ്ങളായ് ആത്മാവില്‍ നിറയുന്ന തീരാത്ത മോഹമായ്‌ പാടുന്നു ഞാന്‍ (ഹൃദയം..) തന്ത്രി പോയ വീണ ഞാന്‍ അപശ്രുതിയായ്‌ തീരുന്നു (2) സ്വരവും നാദവുമൊന്നാകുവാന്‍ നാഥാ നിന്നോടു യാചിക്കുന്നു (2) (ഹൃദയം..) ഋതുക്കള്‍ വന്നു പോയാലും മരണഭീതി വന്നാലും (2) ദേഹം ഒരുപിടി മണ്ണാകുവോളം ഈ പാപിയെ നീ കൈവിടല്ലേ (2) (ഹൃദയം..)

amba yerusalem amparin kalcayil അംബ യെരുശലേം അമ്പരിന് കാഴ്ചയില്

Image
അംബ യെരുശലേം അമ്പരിന്‍ കാഴ്ചയില്‍ അംബരെ വരുന്ന നാളെന്തു മനോഹരം തന്‍മണവാളനുവേണ്ടിയലങ്കരി- ച്ചുള്ളൊരു മണവാട്ടിട്ടി തന്നെയിക്കന്യകാ- നല്ല പ്രവൃത്തികളായ സുചേലയെ മല്ലമിഴി ധരിച്ചുകണ്ടഭിരാമയായ് ബാബിലോണ്‍ വേശ്യയേപ്പോലിവളെ മരു- ഭൂമിയിലല്ല കാണ്മു മാമലമേല്‍ ദൃഢം നീളവും വീതിയും ഉയരവും സാമ്യമായ് കാണുവതവളിലാണന്യയിലല്ലതു ഇവളുടെ സൂര്യചന്ദ്രര്‍ ഒരുവിധത്തിലും വാനം വിടുകയില്ലിവള്‍ ശോഭ അറുതിയില്ലാത്തതാം രസമെഴും സംഗീതങ്ങള്‍ ഇവളുടെ കാതുകളില്‍ സുഖമരുളിടും ഗീതം സ്വയമിവള്‍ പാടിടും കനകവും മുത്തു രത്നം ഇവളണികില്ലെങ്കിലും സുമുഖിയാമിവള്‍കണ്ഠം ബഹുരമണീയമാം

அலைகடலெனத் திரண்டு வாரீர் இறைமக்களே - Alaikadalenath Thirandu Vaareer Irai Makkaley

Image
அலைகடலெனத் திரண்டு வாரீர் இறைமக்களே அருள்மழையினைப் பொழிய தேவன் காத்திருக்கின்றார் ஒரு கொடி கிளை நாமென இனி வாழும் நாளிலே புது உறவும் புது யுகமும் ஆகும் வாழ்விலே 1. வேதம் வாழ வேண்டும் மனிதம் மலர வேண்டும் நாடு செழிக்க வேண்டும் சத்தியம் நிலைக்க வேண்டும் இயேசுவாக வேண்டும் வரங்கள் சேர வேண்டும் வாழ்வினில் புது வசந்தங்கள் வர நீதிதேவன் ஆட்சி மலர உண்மை அன்பு நீதியே மண்ணில் வாழ்வுப் பாதைகள் உலகம் தேடும் அமைதியை உணர்ந்து உயர்ந்து வெல்க 2. பொய்மை நீங்க வேண்டும் வாய்மை வளர வேண்டும் தீமை ஒழிய வேண்டும் தர்மம் ஓங்க வேண்டும் வாழ்வில் தூய்மை வேண்டும் நெஞ்சில் நேர்மை வேண்டும் வாழ்வினில் புது அர்த்தங்கள் பிறக்க பாசதீபம் எங்கும் ஒளிர  

அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி ஆனந்த இல்லம் செல்வோம் - Arpaana Pookalai Anbuden Yenthi Aanantha

Image
அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி ஆனந்த இல்லம் செல்வோம் - அங்கு ஆயிரம் விளக்குகள் பீடத்தில் ஏந்தி அவருக்கு நன்றி சொல்வோம் 1. உம் பெரும் கருணை நலன்களை சுவைத்தோம் உம் திரு நிழலில் அமைதியை உணர்ந்தோம் தடைகளைக் கடக்க உமதருள் அடைந்தோம் நிலையான அன்பிது நிதமுமைத் தொடர்வோம் நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம் 2. உம் அருள்மொழியின் பலன்களை சுவைத்தோம் உம் திருக்கரத்தின் வலிமையை உணர்ந்தோம் அலையென மேவிடும் துயர்களைக் கடந்தோம் அளவில்லா அன்பிது உன்னடி பணிந்தோம் நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்

10 Commandments Telegu

Image

என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது- Yen Koodave Irum Oh Yesuvey

Image
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது (2) 1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனிரே (2) என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே 3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே  நீங்க தானப்பா (2) - என் கூடவே

மங்கள நிலவே மாமரி அன்னையே, Mangala nilavae Maamari Annaiyae

Image
மங்கள நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே இறை வழி நின்று விரைந்தெம்மைக் காக்கும் சுகம் தரும் சுந்தரியே தாயே சுகம் தரும் சுந்தரியே மங்கள நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே -(2) வேளாண் நகர் போற்றும் காவியமே வேளையில் துணை நிற்கும் காவலியே வரங்கள் பொழியும் வான் மழையே வரும் முன் காத்திட வருபவளே இறை உளம் விளங்கிட உனைத் தந்தாய் மகனையேத் தந்திட எமை மீட்டாய் வழிகளைத் காட்டியே முன் சென்றாய் அவர் வழி நடப்பதே முறை என்றாய்

பாத்திமா அன்னை செபம்

Image
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

துஷ்ட சக்திகள் விரட்டும் ஜெபம்

Image
குருசான குருசே கட்டுண்ட குருசே, காலாய் நின்ற குருசே தண்ணியிலும், தொட்டியிலும், சிங்கார மேடையிலும் எங்களை துன்புறுத்தும் பிசாசுகளையும், எங்களை அறியாமல் தீங்கு செய்வோரையும் விரட்டிய சிலுவையை மூண்றாணி மூண்றாணி மூண்றாணி

இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும், Yesuvin Manthaiyil Naam Annaivarum

Image
இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும் ஒன்றேயாம் நாம் ஒன்றேயாம் உயரிந்தோராயினும் தாழ்ந்தோராயினும் வெள்ளையோ கறுப்போ ஆனாலும் (2) நாம் ஒன்றேயாம்

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார், Yutha Raja Singam Uyirththelunthaar Uyirththelunthaar Narakai Jeyiththelunthaar

Image
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத 7. பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார் அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார் – யூத 8. கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம் பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத

மன்னிப்பு மன்றாட்டு

Image
எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்; ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். மார்பில் தட்டிக்கொண்டு அவர்கள் சொல்கின்றனர்: என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. மீண்டும் தொடர்ந்து சொல்கின்றனர்: ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம், Um Peranbil Nambikkai Vaithullaen

Image
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2 1.உம்மை போற்றி பாடுவேன் என் ஜீவன் இருக்கும் வரை-2 எனக்கு நன்மை செய்தீரே (செய்தீரே செய்தீரே) எப்படி நன்றி சொல்வேன்-2 இயேசையா நன்றி ஐயா இயேசையா நன்றி-2-உம் பேரன்பில் 2.உயிரோடென்னை காக்க என் மேல் நோக்கமானீர்-2 வியாதியினின்று மீட்டீரே (மீட்டீரே மீட்டீரே..) மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா 3.மிகுந்த செல்வத்தில் நான் மகிழ்வதை விட-2 உந்தன் சமுகத்திலே-2 (நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா

பரிபூரண ஆனந்தம் நீங்க தானேநிரந்தர பேரின்பம் நீங்க தானே, paripoorana aanantham neenga thaanaeniranthara paerinpam

Image
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 2) கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே – 2 அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர் – 2 – உம் இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 3) குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா – 2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான் – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே -2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya

Image
ஒப்புக்கொடுத்தீர் ஐயா உம்மையே எனக்காக உலகின் இரட்சகரே உன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர் நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் 6.மீட்கும் பொருளாக உம் இரத்தம் தந்தீர் ஐயா சாத்தானை தோற்கடித்து சாவையும் வென்றீர் ஐயா

உம் நாமம் சொல்ல சொல்லஎன் உள்ளம் மகிழுதையா, um naamam solla sollaen ullam makiluthaiyaa

Image
உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் மகிழுதையா என் வாழ்வில் மெல்ல மெல்ல உம் இன்பம் பெருகுதையா 1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும் உமக்கது இணையாகுமா உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும் உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம் 2. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன் உம் நாமம் என்னவென்பேன் மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன் உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம் 3. முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன் முன்னவர் நீரே என்பேன் மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன் வாழ்க உம் நாமம் என்பேன் — உம் நாமம்

உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம், Ummai Vazlthuvom Ummai Poortuvom

Image
உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம் உம்மை ஏத்துவோம் இறைவா -2 (2) 1. இறைவனின் சந்நிதியில்      இறைவனின் இல்லத்தில் - 2     இறைவனின் செயல்களுக்காய்               இறைவனின் மாட்சிமைக்காய் 2   எக்காளத் தொனியுடனே - நாம்            இறைவனைப் போற்றுவோம் - 2      மத்தளத்துடனே யாம் - நம்       இறைவனை ஏத்துவோம் -2 3    யாழோடும் வீணையோடும்          ‌‌புல்லாங்குழலோடும் -2       நாம் இறைவனைப் போற்றுவோம்

உம்மை வாழ்த்தி வணங்க வந்தேன் எந்தன் வாழ்வை இணைக்க வந்தேன், Ummai Nambii Vanthen Yenthan Vazlvai Eenaika Vanthe

Image
உம்மை வாழ்த்தி வணங்க வந்தேன் எந்தன் வாழ்வை இணைக்க வந்தேன் கானல் நீரினைக் கண்டிக்க கலைமான் கனைத்திடும் நிலைபோல் தவித்து நின்றேன் கனிவாய் ஏற்றிடும் பேரருள் முதல்வா உம் ஒளியுமிழ் பதமதில் சரணடைந்தேன் உலகின் கவலைகள் உள்ளத்தின் அலைகள் உம்மிடம் வந்தால் நீங்கிடுமே  நிலையில்லா இவ்வுலகினிலே - மாயை நீங்கிட உன்னிடம் சரணடைந்தேன் 

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல, ummai nampi vanthaen naan vetkappadalaum thayai ennaik kaividala

Image
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம், thaen inimaiyilum Yesuvin naamam

Image
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே – அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே பாவியை மீட்கத் தாவியே உயிரை தாமே ஈந்தவராம் – பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்’ கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் – நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் – அதைப் பூண்டுகொண்டால் தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே

என்னை அருமையாய் நடத்தி வந்த இயேசுவே என்னை கிருபையாய், Yennai Arumaiyai Nadathi vantha Yesuvey

Image
என்னை அருமையாய் நடத்திவந்த இயேசுவே என்னை கிருபையாய் நடத்திவந்த நேசரே அனுபல்லவி இயேசுவே என் நேசரே என் பிரியமே என் இயேசுவே 1. வனாந்திர பாதையில் உந்தன் மார்பினில் சாய்ந்து இளைப்பாற செய்தீரே இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடத்தினீர் இருளெல்லாம் ‌‌வெளிச்சமாக மாற்றினீர் 2. தண்ணீரை கடந்து வர செய்தீரே ஆறுகளில் மூழ்காமல் காத்தீரே இடைவிடாமல் நான் நம்பும் தேவனே அக்கினியில் வேகாமல் காத்தீரே

சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள், siluvai naathar Yesuvinpaeroli veesidum thooyak kannkal

Image
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூயக் கண்கள் என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம் காயங்களையும் பார்க்கின்றன என் கைகள் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண் பெருமை என்னில் இடம் பெற்றால் முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே,paatith thuthi manamae paranaikkonndaatith thuthi thinamae

Image
பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச் செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில் மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் சொந்த ஜனமாக யூதர் இருந்திட தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர் எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள் எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை

நம்பி வந்தேன் மேசியாநான் நம்பி வந்தேனே, Nambi Vanthen Mesiyanampi vanthaen maesiyaa

Image
நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே – திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே – நான் 4. பாவியில் பாவியே கோவியில் கோவியே – கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே – நான் 5. ஆதி ஓலோலமே பாதுகாலமே – உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த – நம்பிவந்தேனே – நான்

எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன், eththanai nanmaikal enaku seytheer yeppati nanti solvaen

Image
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் – நான் நன்றி ராஜா நன்றி ராஜா தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன் பெலவீனன் என்று தள்ளி விடாமல் பெலத்தால் இடைக் கட்டினீர் பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் கிருபையால் இரட்சித்தீரே எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காக மீண்டும் வருவீர் கரங்களைப் பிடித்து கண்மணி போல காலமெல்லாம் காத்தீர் பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி பூரண சுகமாக்கினீர் முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி சாத்தனை ஜெயித்து விட்டீர் நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு விவரிக்க முடியாதையா

நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்றுநாள் முழுதும் துதிப்பேன், nantri nantri entunanti nantri entunaal muluthum thuthippaen

Image
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள் முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மதியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் உண்ணும் போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும் போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன் வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும் போதும் துதிப்பேன் நெருக்கத்திலே துதிப்பேன் – பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன் சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே சத்தியமே என் நித்தியமே என் ஜீவனே நல் ஆயனே உன்னதரே உயர்ந்தவரே என் பரிகாரியே பலியானீரே

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு, ummaiyallaamal enakku yaarunndu ummaiththavira viruppam ethuvunndu

Image
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையா தேவையெல்லாம் நீர்தானையா  இரட்சகரே… இயேசுநாதா… தேவையெல்லாம் நீர்தானய்யா  1. இதயக்கன்மலை நீர்தானய்யா    உரிய பங்கும் நீர்தானய்யா    எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்   வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்  2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்    நீரே எனது உயிர்த்துடிப்பு                 உமது விருப்பம்போல் நடத்துகிறீர்    முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம்     உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்     உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்     உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்

மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன், maravaamal ninaiththeeraiyaamanathaara nanti solvaen

Image
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே…

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு, Desame Payapadathey Makilnthu Kalikooru

Image
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு சேனையின் கர்த்தர் உன் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும் கொடிய எகிப்து அகன்றிடும் நித்தமும் உன்னை நல்வழி நடத்தி ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் 2. ஆற்றலாலும் அல்லவே சக்தியாலும் அல்லவே ஆவியினாலே ஆகும் என்று ஆண்டவர் வாக்கு அருளினாரே

அண்ணல் கிறிஸ்தேசையனே - Annal kristheyseiyanae

Image
பல்லவி அண்ணல் கிறிஸ்தேசையனே - அரும்பாவிக்கும்  திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே! சரணங்கள் 1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை  திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை  திருவழியில் - அவரருளொளியில் - தினம் தேற்றி நடத்தி ஆளும் - அண்ணல் 2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி  தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி  தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே - எந்தன்  தேசிகரும் அவரே! - அண்ணல் 3. உண்மையாய் மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு  ஜென்ம பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி  புரிவாரோ - இரட்சை - அவர் நேரே - திவ்விய  குருவாயுதித்தவரே - அண்ணல் 4. பாவியே நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டு தாவியுன் மனங்கண்டு தர இரட்சை அங்கேயுண்டு  தவறாதே - மனம் - பதறாதே - நல்ல தருணமிதை விடாதே - அண்ணல்

அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன், Anjalodu Nenjurugi Aavaalai vanthean

Image
அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை  ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா! 1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் - இத் தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே - அஞ்சலோடு 2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே - நின் சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே - அஞ்சலோடு 3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் - நல் இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் - அஞ்சலோடு 4. பார்வை பேச்சு கேள்வி சிந்தை யாவினாலுமே - வரும்பாவ தோஷங்கட்கு என்னைப் பாதுகாரையா - அஞ்சலோடு 5. ஆயனே அடியானுக்கு நாயன் நீரல்லால் - இம் மாய வாழ்வில் ஒன்றுமில்லை மாய்கை மாய்கையே - அஞ்சலோடு

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை - Agamagilnthadi Panivomae Naam Deva paalanai

Image
அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த - எம் மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி ஆர்ப்பரிப்போமின்று கூடி, தீன பந்தா மெம் திவ்விய னேசுவை தினமதில் துதிப்போம் கொண்டாடி - அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய் ஈன வுருவ மெடுத்தார் ஏவையின் பாவ வேரையறுத் தெமக் கினிய இரட்சையுமளித்தார் - அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே! மேலுலகோருக்கும் கோனே! பாவிகள் மோட்சப் பதவியடைந்திட தாவியிப் புவியில் வந்தாரே - அக