உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல, ummai nampi vanthaen naan vetkappadalaum thayai ennaik kaividala

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல (2)
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல்

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு