அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை - Agamagilnthadi Panivomae Naam Deva paalanai

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்

தேவ பாலனை


தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த - எம்

மேசியா இயேசுவைப் போற்றி


1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி

ஆர்ப்பரிப்போமின்று கூடி,

தீன பந்தா மெம் திவ்விய னேசுவை

தினமதில் துதிப்போம் கொண்டாடி - அக


2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய்

ஈன வுருவ மெடுத்தார்

ஏவையின் பாவ வேரையறுத் தெமக்

கினிய இரட்சையுமளித்தார் - அக


3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே!

மேலுலகோருக்கும் கோனே!

பாவிகள் மோட்சப் பதவியடைந்திட

தாவியிப் புவியில் வந்தாரே - அக

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு