எம்மை காத்திடும் சூசை தந்தையே நன்றி பாடியே வாழ்த்துகின்றோம்| Yemmai Kaathidum Soosai Thanthaiaye Nantri Paadiaye Vazlthukintrom

எம்மை காத்திடும் சூசை தந்தையே
நன்றி பாடியே வாழ்த்துகின்றோம்
வளர்ந்து ஏறும் எம் திருச்சபையும்
உந்தன் பாதுகாவலினால்

தொழிலாளர்களின் பாதுகாவலரே சூசை தந்தையே
எங்கள் குடும்பங்களின் பாதுகாவலரே சூசை தந்தையே
உந்தன் பாதுகாவலில் இறைமகன் இயேசுவும் 
ஞானத்தில் வளர்ந்தாரே
உம் துணை என்றும் எம்மை தொடர்ந்து வந்தால்
இறைவாழ்வை காண்போமே

கன்னி மேரியின் தூய்மை காத்தவரே சூசை தந்தையே
இறை தந்தையின் திட்டம் ஏற்றவரே சூசை தந்தையே
உழைப்பின் மேன்மை என்னில் உணர்த்திய தந்தையே
உழைப்பால் உயர்வோமே
உம் துணை என்றும் எம்மை தொடர்ந்து வந்தால்
இறைவாழ்வை காண்போமே.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு