அண்ணல் கிறிஸ்தேசையனே - Annal kristheyseiyanae

பல்லவி

அண்ணல் கிறிஸ்தேசையனே - அரும்பாவிக்கும் திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே!

சரணங்கள்

1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை திருவழியில் - அவரருளொளியில் - தினம்தேற்றி நடத்தி ஆளும் - அண்ணல்

2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே - எந்தன் தேசிகரும் அவரே! - அண்ணல்

3. உண்மையாய் மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு ஜென்ம பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி புரிவாரோ - இரட்சை - அவர் நேரே - திவ்விய குருவாயுதித்தவரே - அண்ணல்

4. பாவியே நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டுதாவியுன் மனங்கண்டு தர இரட்சை அங்கேயுண்டு தவறாதே - மனம் - பதறாதே - நல்லதருணமிதை விடாதே - அண்ணல்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு