மன்னிப்பு மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
மார்பில் தட்டிக்கொண்டு அவர்கள் சொல்கின்றனர்:
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
மீண்டும் தொடர்ந்து சொல்கின்றனர்:
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
Comments