குழந்தை இயேசு ஜெபம்
அற்புதக் குழந்தை இயேசுவே! எங்களை ஆசீர்வதித்து வரவேற்கக் கரம் விரித்துக் காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவி புரியும். நீரே எங்கள் ஆண்டவர். நீரே எங்கள் மீட்பர். எங்களைப் பற்றி உமக்கு அதிக அக்கறை உண்டு. எங்கள் மன்றாட்டுக்களைக் கேட்க நீர் எங்களோடு எப்போதும் இருக்கின்றீர். எனவே, எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து, எங்கள் மன்றாட்டுக்களைக் கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமை மிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு கெஞ்சிக் கேட்கிறோம். தந்தையோடும், தூய ஆவியாரோடும், இறைவனாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி புரியும் இயேசுவே. ஆமென்.
Comments