Posts

Showing posts from July, 2023

மீட்புக்குத் தயாரிப்பு

Image
நாம் இவ்வுலகப் படைப்பிலே அழகையும் ஒழுங்கையும் காண்கிறோம்‌. அவற்றைக் கண்டு பெரிதும் வியப்பு அடைக்கிறோம். ஆனால் இந்த அழகான உலகில் பாவமும் தீமையும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். இவற்றின் காரணத்தை அறிய ஆவல் கொள்கிறோம்.

நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?

Image
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அன்பு செய்ததுபோல நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

எல்லா மனிதரையும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?

Image
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்; இதனால் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள். ஆகவே நாம் எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும்.

கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன?

Image
தாம் அளித்த கட்டளைகளுக்கும் நம் மனச்சான்றுக்கும் ஏற்ப வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.

கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய முடியும் ?

Image
கடவுளின் விருப்பப்படி வாழ்வதன் வழியாக நாம் அவரை அன்பு செய்ம முடியும்.

புனித அல்போன்சா பக்தி மாலை

Image
புனித அல்போன்சா பக்தி மாலை தொடக்க மன்றாட்டு தூய ஆவியே எழுந்தருளி வாரும். உமது கொடைகளை பொழிந்து எங்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவீராக. மோட்ச வீட்டின்மீதான நம்பிக்கையில் எங்களை வழிநடத்தும். எங்கள் இதயங்களை இறையன்பால் பற்றி எரிய செய்வீராக. புனித அல்போன்சாவே நீர் புண்ணிய வழியில் நடந்து சென்றது போல எங்களையும் நல்வழியில் நடத்தியருளும். நாங்கள் தாழ்ச்சியிலும், எளிமையிலும் பிரமாணிக்கத்துடன் உமக்கு ஊழியம் புரிந்து புனிதத்திலும் விவேகத்திலும் தெய்வபயத்திலும் நாளுக்கு நாள் முன்னேற இறைவனை மன்றாடும். ஆமென். புனித அல்போன்சா செய்த செபம்: "ஓ என் ஆண்டவராகிய இயேசுவே உம் திருஇதயத்தின் காயத்தினுள் என்னை நீர் மறைப்பீராக. அன்பும் மதிப்பும் பெறுவதற்கான ஆசையினின்று என்னை நீர் விடுவித்தருளும். பேரும் பெருமையும் தேடுவதற்கான முயற்சியினின்று என்னை காப்பாற்றும். நான் சிறு அணுவளவேனும் உம் திரு இதயத்தினது அன்புத்தீயின் ஒரு பொறியும் ஆகும் வரையில் என்னை நீர் தாழ்த்துவீராக. எல்லாப் படைப்புக்களையும் என்னையுமே மறந்துவிடுவதற்கான அருளை எனக்கு தந்தருளும். சொல்ல...

புனித அல்போன்சாவிடம் செபம்

Image
புனித அல்போன்சாவே! நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்குகொண்ட நீர், எங்கள் மத்தியில் இருந்து தேர்ந்துகொள்ளப்பட்டீர். புண்ணியத்தில் வளர்ந்த நீர் இறைவனால் புனித நிலைக்கும் மோட்ச பாக்கியத்திற்கும் அழைத்துக்கொள்ளப்பட்டீர் . எங்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் இறைவனிடம் எமக்காய் பரிந்து பேசும். ஓ துன்பங்களால் தூய்மை அடைந்த தூயகமே! உம்மை போல் நாங்களும் இறைவனை முற்றிலும் சரணடைந்து தூய வாழ்வு வாழ வழிநடத்தும். கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும், எம் பாவங்களின் மன்னிப்பிற்காகவும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மீட்பிற்காகவும் எங்கள் துன்பங்களை பொறுமையோடு ஏற்று இறை மகிமைக்காக வாழும் வரம் தாரும்.  ஆமென்.

தூய ஆவியை நோக்கிய செபம்

Image
தூய ஆவியே என் ஆருயிரே உம்மை ஆராதிக்கிறேன். என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும். எனக்கு திடமளித்து என்னை தேற்றும் நான் செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும். உமது திட்டத்தை தெயப்படுத்தினால் போதும் எனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன்.

வேளாங்கண்ணி மாதா ஜெபம்

Image
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்பகிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேஷ உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்க...

தமிழ்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள், Catholic Bishops of Tamil Nadu

Image
தமிழ்நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் லத்தீன் வாழிபாட்டு முறை மறைமாவட்டங்கள்: 18 1. சென்னை - மயிலை  உயர்மறைமாவட்டம்    மேதகு பேராயர். ஜார்ஜ் அந்தோணிசாமி பிறப்பு                          -     பிப்ரவரி 15, 1952 குருத்துவத்  திருநிலைப்பாடு     -     நவம்பர் 19, ‌1980 ஆயர் நியமனம்.      -     நவம்பர் 21, 2012 ஆயர்   திருநிலைப்பாடு     -      நவம்பர் 21, 2012 2. மதுரை உயர்மறைமாவட்டம்:     மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி பிறப்பு                         -    அக்டோபர் 1, 1949          குருத்துவத்  திருநிலைப்பாடு   -  ‌‌  ஜூலை 7, ‌1976 ஆயர் நியமனம்.    -    ஜூலை 26, 2014  ஆயர்   திருநிலைப்பாடு...

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன், Ummaalae Naan Oru Senaikkul Paayvaen Mathilaith Thaanndiduvaen

Image
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டிடுவேன் ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம் 1. எனது விளக்கு எரியச் செய்தீர் இருளை ஒளியாக்கினீர் 2. மான்களைப் போல ஓடச் செய்தீர் உயர அமரச் செய்தீர் 3. பெலத்தால் இடைக்கட்டி வழியை செவ்வையாக்கி வாழ வைத்தவரே 4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை எனது அடைக்கலமே 5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர் எந்நாளும் தாங்கிக் கொண்டீர் 6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை அகலமாக்கிவிட்டீர்

உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம், Ummai Nampi Unthan PaathamUruthiyaay Pattik Kontoom

Image
உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் ஒரு போதும் கைவிடமாட்டீர் 1. கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து காலமெல்லம் காத்துக் கொண்டீர் 2. மகனாக மகளாக அப்பா என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தீர் 3. அச்சாரமாய் முத்திரையாய் அபிஷேக வல்லமையை அடிமைக்குத் தந்தீரே 4. குருடர்கள் பார்த்தார்கள் செவிடர்கள் கேட்டார்கள் முடவர்கள் நடந்தார்கள்

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே, Yesu Paatham Enakkup Pothum Entha Naalum Aananthamae

Image
இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே – 2 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் – நான் 2. இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் – நான் 3. காத்திருந்த பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் – நான் 4. கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே – கொடிய 5. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு இது – எனக்கு 6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன் என்றும் துதித்திடுவேன் – நான்

இயேசு சுமந்து கொண்டாரே நான் சுமக்க தேவையில்லை, Yesu Sumanthu Kondaarae Naan Sumakka Thaevaiyillai

Image
இயேசு சுமந்து கொண்டாரே நான் சுமக்க தேவையில்லை இயேசுவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன் 1. பெலவீனம் சுமந்து கொண்டார் பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின் 2. என் நோய்கள் சுமந்து கொண்டார் என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், Aththimaram Thulirvidaamal Ponaalum

Image
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்

கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன், Karththaraiyae Thuthippaen Kaalamellaam Thuthippaen

Image
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் – நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலைக் கேட்டு விடுதலை கொடுத்தார் 2. எனக்குதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன் 3. எனது பெலனும் எனது மீட்பும் கீதமுமானார் நம்பியிருக்கும் கேடயமும் கோட்டையுமானார் 4. கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவும் பாவம் என்னை அணுகமுடியாது 5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்குச் செய்தாரே உயிரோடிருந்து உலகத்திற்கு எடுத்துச் சொல்லுவேன்

நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமே, Naan Yesuvin Pillai Payamae Illai Ennaalum Santhoshamae

Image
நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமே 1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் மகனாக மகளாக தெரிந்து கொண்டார் 2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் 3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன் எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன் 4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் 5. சுகமானேன் சுகமானேன் இயேசுவின் காயங்களால் சுகமானேன் 6. முறியடிப்பேன் முறியடிப்பேன் எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால், Payappadamaattaen Naan PayappadamaattaenYesu Ennodu Iruppathanaal

Image
பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா 1. உதவி வருகிறார், பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் 6. உலகில் இருக்கிற அலகையை விட என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

போதகர் வந்துவிட்டார் உன்னைத் தான் அழைக்கிறார், Pothakar Vanthuvittar Unnaith Thaan Alaikkiraar

Image
போதகர் வந்துவிட்டார் உன்னைத் தான் அழைக்கிறார் எழுந்து வா – 4 1. கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே 2. பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகனே 3. கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார் உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்க சுமந்து கொண்டார் 4. துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ அன்பர் இயேசு அழைக்கிறார் அணைக்கத் துடிக்கிறார்

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் நாம் வீரநடை நடந்திடுவோம், Vetri kodi pidithiduvom Naam veeranadai nadandhiduvoam

Image
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் நாம் வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் உண்டு – நாம் அலகையை வென்று விட்டோம் 3. காடானாலும் மேடானாலும் கர்த்தருக்க பின் நடப்போம் கலப்பையில் கை வைத்திட்டோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம் 4. கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால் விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம்

நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே, Nalla samaariyan Yesu Ennaith thaeti vanthaarae

Image
நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே 1. என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே 2. அருகில் வந்தாரே மனது உருகினாரே 3. இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே 4. எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே 5. காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே 6. சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே 7. மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே

செபமாலை மறைபொருள்கள்

மகிழ்ச்சி மறைபொருள்கள் (திங்கட்கிழமை ,சனிக்கிழமை) 1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது.  2. மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது.  3. இயேசுவின் பிறப்பு.  4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது.  5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது.  ஒளியின் மறைபொருள்கள் (வியாழக்கிழமை) 1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது.  2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது.  3. இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது.  4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது.  5. இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது .  துயர மறைபொருள்கள் (செவ்வாய்க்கிழமை , வெள்ளிக்கிழமை) 1. இயேசு இரத்த வியர்வை சிந்தியது.  2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது.  3. இயேசு முள்முடி தரித்தது.  4. இயேசு சிலுவை சுமந்து சென்றது.  5. இயேசு சிலுவையில் அறையப்பட்டது.  மகிமை மறைபொருள்கள் (ஞாயிற்றுக்கிழமை , புதன்கிழமை) 1. இயேசு உயிர்த்தெழுந்தது.  2. இயேசுவின் விண்ணேற்றம் 3. தூய ஆவியாரின் வருகை....

புனித சூசையப்பருக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் - ST JOSEPH PRAYER

Image
மகிமை நிறைந்த முதுபெரும் தந்தையாகிய புனித சூசையப்பரே! இறையன்னையின் புனித கணவரே, இயேசு கிறிஸ்துவை வளர்த்த தந்தையே, உம்மை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே, நன்மரணத்துக்கு மாதிரிகையே, உம்முடைய தாசராயிருக்கிற நாங்கள் எங்களை முழுதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.  மூவொரு இறைவனுடைய சமூகத்திலே, உம் திவ்விய மைந்தனான இயேசு, உம் புனித துணைவி, அனைத்து விண்ணுலகவாசிகள் ஆகியோர் முன்னிலையில் மிகுந்த வணக்கத்துடன் உம்மை எங்களுக்குத் தந்தையாகவும், அடைக்கலமாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்.  உமக்கு எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம். உமது மகிமையைக் கொண்டாடி உமக்குரிய வணக்கத்தை அறிக்கையிட்டு ஒரு நாளாவது உமக்குத் துதியையும் வேண்டுதலையும் செலுத்தாமல் இருக்கப் போகிறதில்லை.  நீரும் இடைவிடாமல் எங்களை நினைத்து எங்களுடைய இடையூறுகளை விலக்கி எங்களை அறநெறியிலே வழுவாமல் நடத்தியருளும். இயேசு, இறையன்னை ஆகியோரின் திருக்கைகளில் இறக்க பேறுபெற்ற நீர், நாங்கள் திருவருளோடு இறந்து விண்ணுலகப் பேற்றை அடைந்து, உம்முடனே என்றென்றைக்கும் வாழச் செய்தருளும். - ஆமென். புனித சூசையப்பரைக் குறித்து மன்றாட்டு : ...

நோயில் புனித செபஸ்தியாரிடம் வேண்டுதல் - saint sebastian prayer

Image
போர் வீரராகி உரோமை அரசினால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் தரவும், மறைசாட்சி முடி பெறவும் பேறு பெற்றவரான புனித செபஸ்தியாரே, என் பேரில் இரக்கமாயிரும். பாவியின் சாவை விரும்பாமல் அவன் மனம் திரும்பி நலம்பெற விரும்பும் இறைவன், பாவிகள் மனந்திரும்பவும், நல்லவர்கள்மேலும் புனிதப்படவும், வைசூரி, பேதி, பெருவாரிக்காய்ச்சல் முதலிய நோய்களை அனுப்புகிறார் என்பதையறிவேன். இந்த நோயில் உமது உதவியை கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பெயரால் பீடம் எழுப்பிய பின்னரே நச்சுக் காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.         தியோக்கிளேசியன் அரசனுக்கு அஞ்சாமல் வலிய மறைச்சாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த இன்னல் மிக்க நோயில் என்னைக் கைவிடாதேயும். என்னைப் புனிதப்படுத்த வந்த இந்த நோயை நான் பொறுமையோடே சுமக்க விரும்புகிறேன். நானோ வெகு பலவீனன். காற்றால் அடிக்கப்பட்ட சருகு போலிருக்கிறேன். கடலில் கிடைக்கும் துரும்பு போல் தத்தளிக்கிறேன். இறைவனுடைய சினத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் பருகவேண்டுமென்று இறைவன் மனதாயிருக்கிற இந்த துன்பக் கிண்ணத்தை நான் வீரம் பொருந்த...

இயேசுநாதருடைய திரு இருதயத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் - Personal Prayer Sacred heart jesus

Image
இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு எளியேன் (பெயர்) என்னையே கையளித்து ஒப்புக்கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும் படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இ ரு தயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இ ரு தயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இ ரு தயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.           இனிய திரு இருதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர். நீரே என் உயிரில் ஒரே காவல், என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே, நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து, என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர்பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ.தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இ ரு தயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடித்...

குழந்தை இயேசுவுக்கு செபம் - Infant Jesus Prayer

Image
 எங்கள் மீட்புக்காகப் பரம தந்தையிடமிருந்து இறங்கி தூய ஆவியினால் கருவாகி, கன்னியின் உதிரத்தை அருவருக்காமல் வாக்கே மனுவுருவாகிய மிகவும் இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும் பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள் உம் அன்னை வழியாக எலிசபெத்தம்மாளைச் சந்தித்து உம் முன்னோடியான அருளப்பரைத் தூய ஆவியினால் நிரப்பி அவருடைய தாயின் உதரத்திலே அவரை அர்ச்சித்தருளிய இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள். ஒன்பது மாதம் கன்னித் தாயின் உதிரத்தில் அடைபட்டு புனித கன்னி மரியாவினாலும் புனித சூசையப்பராலும் மிகுந்த ஆர்வத்தோடு வளர்க்கப்பட்டு உலக மீட்புக்காக தந்தையாகிய இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள். பெத்தலகேம் நகரில் கன்னிமரியாவிடமிருந்து பிறந்து துணிகளால் போர்த்தப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டு வானத் தூதர்களால் அறிவிக்கப்பட்டு, இடையர்களால் சந்திக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிர...

அன்பியம் என்றால் என்ன? What is Anbiyam?

Image
கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற 15-20 மூன்று குடும்பங்கள் இணைந்து வாழும் ஓர் கிறிஸ்தவ அமைப்பு. கிறிஸ்துவில் நம்பிக்கையோடு, அடிக்கடி கூடி வந்து, இறைவார்த்தையை மையப்படுத்தி, இறைவேண்டல் செய்து, பகிர்ந்து வாழும் ஓர் அமைப்பு.  இன்ப துன்ப நிகழ்வுகளிலும் இணைந்து…. வழிபாடுகளிலும் பொது நிகழ்வுகளிலும் இணைந்து கலந்துகொண்டு சிறப்பிப்பது… அன்பியம் இறைவார்த்தையையும் நட்புறவையும் அடித்தளமாகக் கொண்டு கத்தோலிக்கர் அனைவரும் குடும்பங்களாக இணைந்து சில குழுக்களாகச் சேர்ந்து கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் பங்கேற்பு திருச்சபையைக் கட்டி எழுப்புதல். அன்பியம் என்றால் என்ன ? திருத்தூதர் பணிகள் 2:42-47 நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை:  அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்……. திருபணி 2:44-45:   நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களையும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைக்கேற்பப் பகிர்ந்தளித்தனர்  திருப...

புனித அந்தோனியாரை நோக்கி ஜெபம் - ST ANTONY PRAYER

Image
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, இறைவனுக்கு ஏற்ற ஊழியரே, குழந்தை இயேசுவை கையில் ஏந்தப் பேறுபெற்ற துயரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த மறைக் பணியாளரே, தப்பறைகளை உடைத்தெறிந்த மறை வல்லுநரே, இறைவனின் தனி அருளால் பசாசுகளை ஓட்டியவரே, துன்பப்படுவோரின் துயரைப் போக்குபவரே, பாவிகளாகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்!            எங்கள் ஆதரவு நீரல்லவோ? தவறி விழும் எம்மைக் கை தூக்கி, இறைவனிடம் விட்டு செல்பவர் நீரல்லவோ? எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பேரின்பமுமான இறைவனிடம் பரிந்து பேசுபவர் நீரல்லவோ? உம்மை அண்டி வந்த உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்! அழுவோரின் கண்ணீரை துடைத்தருளும்! நோயாளிகளுக்கு உடல் நலம் பெற்று தந்தருளும்!               நீர் பாராமுகமாய் இருந்தால் நாங்கள் யாரை அண்டிச் செல்வோம்? ஆண்டவரிடம் நீர் எங்களுக்காகப் பரிந்து பேச மறுத்தால் நாங்கள் யாருடைய உதவியை நாடுவோம்? புதுமை வரம்பெற்றிருக்கும் எம் ஞானத் தந்தையே, உம் ஆதரவை நாடி வந்திருக்கும் உம் பிள்ளைகளின் மன்றாட்...

பழைய கிறிஸ்து கற்பித்த செபம்

Image
  பரலோகத்தில்  இருக்கிற எங்கள்  பிதாவே !  உம்முடைய  நாமம்  அர்ச்சிக்கப்படுவதாக ,உம்முடைய  ராஜ்ஜியம்  வருக, உம்முடைய சித்தம்  பரலோகத்தில்  செய்யப்படுவது  போல  பூலோகத்திலும்  செய்யப்படுவதாக.            எங்கள் அனுதின உணவை  எங்களுக்கு  இன்று  அளித்தருளும் , எங்களுக்கு தீமை  செய்பவர்களை  நாங்கள்  பொறுப்பது போல  எங்கள் பாவங்களைப்  பொறுத்தருளும்,  எங்களை  சோதனையில்   விழவிடாதேயும்,  தீமைகளிலிருந்து  எங்களை  இரட்சித்தருளும்.. -   ஆமென்

என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு, Enna Azhagu Un Arul Azhagu

Image
என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு (2)* ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே… சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே… (என்ன அழகு…)* அம்மா 1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே என்னை கொள்ளைக்கொண்டதே… (2) ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2 (என்ன அழகு…)* அம்மா 2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சினில் விளைந்திடுமே கணிந்திடுமே (2) வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே – 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2 (என்ன அழகு…)* அம்மா