இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல் வேளையிலே, Inbam Poongum Naaliniley Iniya Nal Velaiyiley

இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல் வேளையிலே
இதயங்களின் சங்கமமே இறையரசில் மங்களமே

1. உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம்
மனங்கள் அன்பில் இணையும் அருள்
மழையில் மலர்ந்து நனையும்
குறைகள் யாவும் இன்று கரைந்திடுமே - மன
நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே (2)

2. அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில்
அடிமைக் கோலம் ஒழியும்
அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும்
பயணம் இனிது இங்கு தொடர்ந்திடுமே - அன்பின்
பாதை பாரெங்கும் படர்ந்திடுமே (2)

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு