போதகர் வந்துவிட்டார் உன்னைத் தான் அழைக்கிறார், Pothakar Vanthuvittar Unnaith Thaan Alaikkiraar

போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்

எழுந்து வா – 4

1. கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே

2. பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகனே

3. கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்க சுமந்து கொண்டார்

4. துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு