இறைவனே என்னைக் காக்கின்றார் இனியொரு குறையும் எனக்கில்லை, Iraivan Yennai Kaakintar Inneoru Kooraium Yennakillai

இறைவனே என்னைக் காக்கின்றார்
இனியொரு குறையும் எனக்கில்லை
நிறைவழி நோக்கி நடத்திடுவார்
நிம்மதியோடு நான் வாழ்வேன் (2)

1. பகலின் வெம்மையில் பயமில்லை
இருளின் நிலவிலும் தீமையில்லை (2)
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
உன் கால் இடற விடுவதில்லை
உன்னதர் என்றும் அயர்வதில்லை 2

2. இன்றும் என்றும் காப்பவராம்
பயணத்தில் துணையும் அவர் கரமாம் (2)
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
தீமையைக் கண்டு நான் அஞ்சேன்
நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2

3. உன்னதம் அமைதியில் மலரட்டுமே
உன்னெழில் நீதியில் ஒளிரட்டுமே (2)
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
நன்மைகள் எங்கும் நிலவட்டுமே
இறைவனின் நிழலில் வாழட்டுமே - 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு