காலை ஆராதனைக்குரிய செபம்.

எங்கள் பரமபிதாவும் சருவ வல்லமையுமுள்ள நித்திய கடவுளுமாகிய ஆண்டவரே, எங்களுக்கு ஒரு ஆபத்தும் நேரிடாமல் இந்நாள் வரைக்கும் எங்களைக் காத்தீர்; இந்நாளிலும் உமது மகா வல்லபத்தினால் எங்களைக் காப்பாற்றியருளும்; நாங்கள் யாதொரு பாவத்திலும் விழாமலும், எவ்விதமான மோசத்திலும் அகப்படாமலும், நாங்கள் செய்வதெல்லாம் உம்முடைய ஆளுகையினால் நடத்தப்பட்டு உமது சமுகத்திற் செவ்வையாய் விளங்கும்படி எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தம் தயை செய்தருளும்.

ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு