அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே

அளவற்ற அன்பினால் அணைப்பவரே

எண்ணற்ற நன்மையால் நிறைப்பரே

மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா

பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே - ஆ - அடைக்கலமே
கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே

சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே

நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே

பக்தரின் பேரின்ப பாக்கியமிதே - ஆ - அடைக்கலமே
என்னை என்றும் போதித்து நடத்துபவரே

கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே

நடக்கும் வழிதனைக் காட்டுபவரே

நம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுமே -ஆ- அடைக்கலமே
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ

கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ

குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே

அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே - ஆ - அடைக்கலமே
பாவங்களை பாராதென்னை பற்றிக்கொண்டீரே

சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே

இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே

உற்சாக ஆவி என்னை தாங்க செய்தீரே - ஆ - அடைக்கலமே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு