வாருங்கள் இறை மக்களே கடல் அலையெனவே வாரீர், vaarungal iraimakkalae kadal alaiyenavae vaareer

வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் 

நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக 

அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம் 

சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே 

எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் – 2 

வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே 

வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் 

தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம் 


அருள் ஒளி மனதினில் கலந்திடவே 

கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் – 2 

மனிதனில் மனிதம் மலர்ந்திடவே 

எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் 

உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே 

இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு