உணவுக்குப் பின் நன்றியறிந்த ஸ்தோத்திரம்

சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா! தேவரீர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரீர் எனக்குச் செய்து வருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு தோத்திரம் பண்ணுகிறேன்.

சுவாமி கிருபையாயிரும்.
கிறிஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்.
பரலோக மந்திரம்.

இப்பொழுதும் எப்பொழுதும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.

ஜெபிப்போம்:

சர்வேசுரா சுவாமி, எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய சீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.

ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு