தேவ ஸ்துதிகள்.

எல்லாம் வல்ல சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக. அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப்படுவதாக.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான சேசுகிறீஸ்து நாதர் ஸ்துதிக்கப்படுவாராக, சேசுவின் திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக, அவருடைய மிகவும் அர்ச்சிதமான இருதயம் ஸ்துதிக்கப்படுவதாக,

அவருடைய விலை மதிக்கப்படாத திரு இரத்தம் ஸ்துதிக்கப்படுவதாக, பீடத்தில், மிகவும் பரிசுத்த தேவதிரவிய அநுமானத்தில் சேசுநாதர் ஸ்துதிக்கப்படுவாராக.

சர்வேசுரனுடைய தாயாராகிய அதி பரிசுத்த மரியம்மாள் ஸ்துதிக்கப்படுவாராக. அவர்களுடைய அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக.

கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம் ஸ்துதிக்கப்படுவதாக. அவர்களுடைய மகிமையான ஆரோபணம் ஸ்துதிக்கப்படுவதாக. அவர்களுடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் ஸ்துதிக்கப்படுவாராக.

தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி ஸ்துதிக்கப்படுவாராக. தம்முடைய சம்மனசுக்களிடத்திலும் புனிதர்களிடத்திலும் சர்வேசுரன் சதாகாலமும் ஸ்துதிக்கப்படுவாராக.

-ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து, எப்போதும் பரிசுத்த கன்னியாஸ்திரியுமாய், நமது ஆண்டவளுமாய் கொண்டாடப் பட்டவளுமாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட தேவமாதாவினுடைய அமலோற்பவத்துக்கும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக் கடவது.

தேவப் பிரசாதத்தின் தாயே! இரக்கத்துக்கு மாதாவே! அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும், மரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை வேண்டி, எங்களைக் காக்கவும், ஆளவும் கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது திருப்பாதம் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம்.

-ஆமென் சேசு.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு