அடைக்கல மாதா பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உருவிலான் உருவாகி உலகில் ஒரு மகனாவதற்கு உதவிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தாயாகிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது திருமகனின் திருவருளை நாங்கள் அடைவதற்கு வழியாகிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகம்,உடல் , பேய் என்னும் ஆன்ம பகைவரிடமிருந்து எம்மைக் காப்பாற்றும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மெய் மறையை வெறுப்பவர்களின் இடையூறுகளில் இருந்து எம்மைக் காக்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாய்க்குரிய தனி வணக்கத்தை மறு தலிப்பவர்  வழிகளிலிருந்து  எம்மைக் காப்பாற்றும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது மகனையும் உம்மையும் வேண்டாமென்று தள்ளுவோரையும் தாயன்போடு அழைக்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அனுதாபத்துடன் பிள்ளைகளைத் தேடிவரும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அரும்பாவிகளையும் அஞ்சாதே என்றழைத்து இரு கை விரித்து நிற்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உடலின் நோய் போக்கி உள்ளத்தின் அழகை வளர்க்கும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருக்காவலூர் அடைந்தார் ஒருக்காலும் அழியார் என்ற நம்பிக்கையூட்டும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாழ்வெல்லாம் எம்மைக் காத்து இறுதி நேரத்தில் எமக்கு உறுதுணை தந்து நித்திய வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இயேசுக்கிறிஸ்து நாதருடைய வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக 
எங்கள் அன்புத் தந்தையாகிய இறைவா ! உமது அன்பை எமக்கு அள்ளிக் கொடுக்கவும், பாவிகளை உம்மிடம் அழைத்து வரவும், மரியன்னையைச் சிறந்த வழியாய் அமைத்தீரே! இந்த அன்னையின் அன்பு நிறைந்த அடைக்கலத்தில் நாங்கள் நாளும் நம்பிக்கையுடன் நடந்து நித்திய வீடு வந்து சேரவும் அங்கு உமது புகழ்சேர் புகழைப்பாடவும் அருள் புரிய வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம் . இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!

ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்று தந்த ஜெபமாலை பாடல் வரிகள் Vetri Tharum Jebamalai Lyrics