சமாதானம் ஓதும் ஏசு கிறிஸ்து இவர் தாம், Samaathaanam Oothum Yesukiristhu ivar thaam

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்

ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு