உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே , unthan naamaththil ellaam koodumellaam koodumae

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்

உந்தன் வார்த்தையால்
புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால்
திருந்தினார் பேதுரு கூடாதது

தபித்தாள் மரித்தாள்
ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐனேயா
சுகமாகி நடந்தான்

மீனின் வாயிலே, காசு வந்ததே
கழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே

வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான்
பவுல் அன்று ஜெபித்ததால்

காலூன்றி நில்லென்று
கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே

எலிசாவின் சால்வையால்
யோர்தான்பிரிந்தது
எரிகோவின் உப்புநீர்
ஆரோக்கியமானது

கோடாரி மிதந்தது
எலிசாவின் வார்த்தையால்
குஷ்டம் மறைந்தது
யோர்தானில் குளித்ததால்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு