இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல், Iraiva Un Thirumun Ooru Kulanthaipola

இறைவா உன் திருமுன் ஒரு குழந்தைபோல்
தாவி மேவி வருகின்றேன் என் நிலை நான் சொல்கின்றேன்
உன் குழந்தை நானல்லவா என்னை நோக்கி ஓடி வந்து
என்னைக் காப்பாயோ (2)

1. அன்பைத் தேடும் போது என் தந்தை நீயல்லவா
அமுதம் நாடும் போது என் அன்னை நீயல்லவா (2)
ஒரு குறையும் இன்றிக் காத்தாய்
நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்
உன்னை ஒதுக்கியே வாழ்ந்து நானும்
இனி என்ன கைமாறு செய்வேன் -2

2. மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவர் நீதானையா
மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானையா (2)
உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து
ஒருநாளும் பிரியாமல் வளர்ந்து
உந்தன் மடியிலே தவழ்ந்து நானும்
இனி அப்பா தந்தாய் என்று அழைப்பேன் -2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு