ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட, Aanantham Poongida Athisaiyangal Nandantida

ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட
ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள்
திருப்பலி பீடத்தில் தேவன் வருகிறார்
திருந்திய உள்ளங்களில் அமைதி தருகிறார்

1. வறுமை யாவும் தீர இன்று
வாழ்த்துப் பாடுவோம் பாடுவோம்
பெருமை யாவும் நிலைக்க அவரில் சங்கமாகுவோம்
அவரில் சங்கமம் வாழ்வில் சந்தோஷம்
அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே

2. உறவில் வளர உண்மை வழியில்
வாழ்ந்து காட்டுவோம் வாழுவோம்
பகிர்வில் உயர அன்பில் மலர்ந்து பணிகள் ஆற்றுவோம்
உன் பணி தொடர்வதால் சாட்சியாய் மாறுவோம்
உன் வழி செல்வதால் உலகை மாற்றுவோம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே

 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு