அமைதியின் கருவியாய் ஆண்டவரே வருகின்றோம், Amaithiyin karuviyai Andavarey
அமைதியின் கருவியாய் ஆண்டவரே வருகின்றோம் (2)
நெஞ்சுக்குள்ளே நீர் அமைத்த அன்பு என்னும்
இல்லம் தன்னில் வளர்கின்றோம் – 2
1. நீயாக தந்த வாழ்க்கை இங்கு
நிலைமாறி போவதேனோ
மாறாத அருள் நேசம்
மன்றாடி கேட்கின்றேன்
ஊருக்கு ஊரிங்கு போர்க்களங்கள்
உள்ளுக்குள் உள்ளத்தில் போர்க்குணங்கள்
மாறும் காலம் காண வேண்டும்
மனித நேயம் வாழட்டும்
2. பேதங்கள் ஏதும் இல்லை
என்னும் வேதங்கள் இன்று வேண்டும்
எல்லோரும் உன் பிள்ளைகள்
இது இல்லையென்றால் நீரும் இல்லை
வானுக்கு மேல் உந்தன் வீடு இல்லை
பூமிக்கு கீழும் ஏதும் இல்லை
மனித இதயம் மாறும் போது
புதிய அரசு பூமியில்
Comments