ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவோமே, Andavar Thirusannithiyil Ananthamudaney Paaduvomey
ஆண்டவரின் திருச்சந்நிதியில்
ஆனந்தமுடனே பாடுவோமே-2
1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்போம்
மங்கள கீதங்கள் முழங்கிடுவோம் (2)
அவரே தேவன் என்றறிவோம்
அவரே நம்மைப் படைத்தாரே
2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம் (2)
துதிப் புகழோடு நுழைந்திடுவோம்
தூய அவரது வாசல்களில்
3. தேவனின் திருப்பெயர் போற்றிடுவோம்
தேவனின் நன்மைகள் சாற்றிடுவோம் (2)
தேவனின் கிருபை உண்மையுமே
தலைமுறை தலைமுறை நீடிக்குமே
Comments