மழலை இதயம் நாடி வருவோம் என விழைவீரோ, Mallalai Idhayam Nadi Varuvom Yenna

மழலை இதயம் நாடி வருவோம் என விழைவீரோ

இசைக் குழலின் ஒலியில் மயங்குவோரே பேச வருவீரோ

மானைப்போல் தவித்து நிற்கும் இதயம் பாரீரோ

தேனைப் போல அருள் சுரந்து தேற்ற வாரீரோ


1. குழந்தை போல பேச எனக்கு இதயமில்லையே

மழலைச் சொல்லும் நாட்களாக மறந்து போனதே (2)

இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப் போனதோ

வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப் போனேனே


2. பாவி என்னைப் பார்த்துப் பார்த்து பரிதவிக்கின்றீர்

மேவி மேவி அழைத்து அழைத்து அன்பு செய்கின்றீர் (2)

தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன்

மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவ பொறுத்தலளிப்பீரோ

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு