மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல மன்னன் யேசு என்னில் வரும் நேரம், Mannil Kalanthidum MazlaiThuli Pola yesu
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல
மன்னன் யேசு என்னில் வரும் நேரம்
கண்ணில் இமைகள் இணைந்திருப்பது போல்
அன்பின் யேசு இணைகின்ற நேரம்
மனதினை திறந்து மகிழ்வுடனே நான் பாடுவேன்
மனத்துயர் எல்லாம் சொல்லி சொல்லி சொல்லி நான் பாடுவேன்
இறைவா இறைவா என்னில் இணைந்திடவா
என் இதயம் இதயம் உன்னில் உறைந்திடவா
1. எழுதாத ஓவியம் நானன்றோ
எழுந்து நீயும் தீட்டிடவா – 2
பழுதான வீணை நானன்றோ
அன்பு இசை மீட்டிடவா – 2
அழுகின்ற மெழுகாக துடிக்கின்றேன்
நிதம் அழியாத வாழ்வாக வருவாயே – இறைவா இறைவா
2. பாழான கிணறும் நானன்றோ
பாய்ந்தோடும் ஊற்றாய் வா – 2
உதவாத பரிசும் நானன்றோ
வழமை என்னில் நிதம் தருவாய் – 2
தொழுகின்ற கைகளை காண்பேனோ
உன்னில் வழுவாமல் வாழ்ந்திட வருவாயே – இறைவா இறைவா
Comments