மங்களம் பாடியே வாழ்த்திடுவோம் மணமக்கள் மாண்புற வேண்டிடுவோம், Mangalam Paadi Vazlthiduvom
மங்களம் பாடியே வாழ்த்திடுவோம்
மணமக்கள் மாண்புற வேண்டிடுவோம்
1. அன்பும் தியாகமும் பொறுப்புணர்வும்
ஆழ்ந்த அமைதியும் குலவிடவே
அன்னை மரியும் வளனும்போல
மண்ணில் விண்ணைக் கண்டடைவீர் – 2
2. இயேசுவின் மரபினர் என்றிடவே
இறையன்புச் சுடரை ஏற்றிடுவீர்
மலைபோல் திகழும் விளக்கம்போல
மண்ணில் மாந்தர் ஒளியாவீர் – 2
Comments